tamilnadu

img

கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதை கண்டித்து பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூன் 22- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் கல்லணை அருகே, திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில், மணல் அள்ளுவதைக் கண்டித்து, பொதுமக்கள், அனைத்து கட்சிகள் சார்பில், திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்து தொடர்ந்து மணல் அள்ளுவதால், இப்பகுதியில் இயற்கை வளம், குடிநீர் பாதிப்பு, விவசாயப் பணிகள் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் கடைமடைப்பகுதிக்கு தண்ணீர் சென்று சேராத நிலை உள்ளது உள்ளிட்டவை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெ.ஜீவகுமார், பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், மாதர் சங்கம் கலைச்செல்வி, கிளைச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், ஜஸ்டின், அறிவழகன், பாலசந்தர், முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி, ஒன்றியச் செயலாளர் மதியழகன், ஊராட்சி தலைவர் வடிவழகன், பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலு கார்த்திகேயன், திமுக ஒன்றிய தலைவர் செல்லக்கண்ணு, காங்கிரஸ் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 800 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் குவாரி தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில் மிகப் பெரிய அளவிற்கு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்து கலைந்து சென்றனர்.