தஞ்சாவூர், ஜூலை 7- கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும், புதுக்குடி ஆவின் பசுங்கன்று வளர்ப்பு நிறு வனத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொட ர்ந்து பணிபுரிந்து வந்த தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டு, சட்ட விரோதமாக புதிய ஆட்களை சேர்க்கும் கால்நடை மருத்துவர் செல்வகணபதி யைக் கண்டித்தும், வேலையை விட்டு நிறுத்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் அனை வருக்கும் ஊதியத்துடன் கூடிய வேலையை நிபந்தனையின்றி மீண்டும் வழங்கிட வேண்டும். கால்நடை மருத்துவருக்கு ஆதரவாக தொழிலாளர்களை தொடர்ந்து மிரட்டி அச்சு றுத்தி வரும் ஓட்டுநர் கந்தசாமி மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு துணைப் பொது மேலாளரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்டபடி, பி.எப், இஎஸ்ஐ பிடித்தம் செய்ய வேண்டும். ஊதியத்தை தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வலியுறுத்தியும், ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) சிஐடியு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில், தஞ்சை - திருச்சி நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டி அருகே புதுக்குடியில், குடும்பத்துடன் காத்திருப்பு போ ராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை மாலை பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டா ட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில், “ஆவின் பால்பண்ணை நிறுவன துணை பொதுமேலாளர் அறிவுறுத்தலின்படி,” 15 தினங்களில், ஆவின் பால் பண்ணை பணிக்கு தேவைக்கேற்ப, ஏற்கனவே பணிபுரிந்த தொழி லாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி க்கு சேர்த்துக் கொள்வதாக” வட்டாட்சியர் அளித்த உறுதிமொழியை ஏற்று, செவ்வா ய்க்கிழமை நடைபெறவிருந்த காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.