தமிழ்ப் பெண் சாதனை
ஸ்வீடனில் நடைபெற்ற உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி யில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்குவாட், பெஞ்ச், டெட்லிப்ட் (Squat, Bench, Deadlift) ஆகிய மூன்று கட்டங்களை கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையை தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். ஐபிஎப் எனப்படும் சர்வதேச பளு தூக்குதல் கழகம், ‘வேர்ல்ட் கிளாசிக் பவர் லிப்ட்டிங் சாம்பியன்ஷிப்’ என்ற பெயரில் போட்டி நடத்தி வருகிறது. இந்தாண்டு ஸ்வீடனில் நடைபெற்று வரும் தொடரில், 20-22 வயதுக்குட்பட்ட, 63 கிலோ எடையுள்ள பெண்களுக்கான பிரிவில் அமெரிக்கா சார்பில் போட்டியிட்ட ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி, இந்த போட்டியின் ஸ்குவாட் பிரிவில் உலக சாதனை படைத்து தங்கப்பதக்கத்தையும் வென்றார். சுமார் 29 ஆண்டுகளுக்கு முன்பு அமெ ரிக்காவிற்கு குடிபெயர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதியினருக்கு அந்நாட்டில் பிறந்து, வளர்ந்தவர் ஆர்த்தி நிதி. தமிழ கத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி யின் தந்தை கருணாநிதி 1987ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்கா விற்கு சென்றார். பிறகு, 1990ஆம் ஆண்டு நாமக்கல்லை பூர்வீகமாக கொண்ட சாந்தியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 1994இல் ஒரு ஆண் குழந்தையும், 1996இல் ஆர்த்தியும் அமெரிக்காவில் பிறந்தனர். பிபிசி தமிழ் செய்தியாளரிடம் அவர் கூறிய தாவது;
“கடந்த நான்கு ஆண்டுகளாக பளு தூக்கும் போட்டிகளுக்காக பயிற்சி செய்து வரும் நான் இவ்வளவு விரைவில், அந்த விளை யாட்டின் ஒலிம்பிக்காக கருதப்படும் இந்த தொடரில் அமெரிக்காவுக்காக பதக்கத்தை வெல்வேன் என்று நினைக்கவில்லை. எனது கடுமையான, விடாப்பிடியான பயிற்சி, எனது நான்காண்டுகால கனவை நிறைவேற்றி யுள்ளது” சமூக அழுத்தத்தையும், மனரீதியான தடையையும் மீறி தனது பெற்றோர் அளித்த ஊக்கமும், சர்வதேச போட்டிக்கு தயாரா னதும் தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் தக்க பயிற்சியை வழங்கிய நிர்வாகம் மற்றும் நண்பர்களும்தான் தனது வெற்றிக்கு காரணம். “இந்தியர்கள் என்றாலே கல்வியில் முதலிடம் என்ற மதிப்பு மிக்க நிலைக்கு புலம் பெயர்ந்த பெற்றோர்களே முக்கிய காரணம். ஆனால், கல்வியை போன்றே அமெரிக்கா வின் விளையாட்டுத் துறையிலும் புலம் பெயர்ந்த இந்தியர்கள் சாதிக்க முடியுமென்ற எண்ணம் வளர வேண்டியது அவசியம். கல்வி, அதை விட்டால் நடனம் என்ற எண்ணத்தி லிருந்து அமெரிக்க இந்தியர்கள் வெளிவர வேண்டும்”
“மேல்நிலை பள்ளிக்கல்வி வரை பரத நாட்டியம் பயின்ற நான், இடையில் ஓராண்டிற்கு அதை நிறுத்தியதால் உடல் எடை அதிகமானது. அதைத்தொடர்ந்து, உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றேன்; உணவு பழக்க வழக்கத்தை மாற்றியமைத்து உடற்கட்டில் அதிக கவனம் செலுத்த தொடங்கினேன். அதைத்தொடர்ந்து, கல்லூரியில் சேர்ந்த பிறகு, பயிற்சியாளர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த அறிவுரையின்படி, பளுதூக்குதலில் ஈடுபட தொடங்கினேன்” . “அமெரிக்கா முழுவதும் நிறவெறி இருக்கி றது என்று கூறமுடியாது. அதே சமயத்தில் நிறத்தின் அடிப்படையில் ஒருவரை தனிமைப்படுத்தும், வசைபாடும் மற்றும் தாக்குதல் தொடுக்கும் சம்பவங்கள் நடை பெற்று கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், நான் இதுவரை நேரடியாக இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டதில்லை. எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் தாண்டி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என்னை தொடர்ந்து பயணிக்க வைத்தது.”
“சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது தாத்தாவும், பாட்டியும் இறந்துவிட்டனர். அதற்கு முன்பு வரை, ஒவ்வொரு ஆண்டும் விடுமுறையின்போது, ஒன்று முதல் இரண்டு மாதத்திற்கு நானும், எனது அண்ணனும் தமிழ்நாட்டிற்கு வந்து உறவினர்களுடன் நேரம் செலவிடுவோம். அப்போது, தமிழர் களின் கலாச்சாரம், பாரம்பரியம், உணவு வகைகள், மொழியின் சிறப்பு போன்றவற்றை தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. நான் பள்ளியில் படித்த போது, தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை எடுத்து செல்லும்போது, என் நண்பர்கள் கேலி செய்த துண்டு. ஆனால், நான் ஒருபோதும் அது குறித்து கவலைப்பட்டதில்லை. இப்போது கூட எனது உடற்கட்டை பராமரிக்கும் உணவு வகைகளில் அவை தொடருகின்றன” . “இந்த சமூகம் நினைப்பதை போன்று பெண்கள் வலுவற்றவர்கள் அல்ல. வாய்ப்பு கிடைத்தால் எந்த பெண்ணாலும் சாதிக்க முடியும். தனக்கு மிகவும் பிடித்த விடயத்தை செய்ய பெண்களுக்கு குடும்பத்தினர் ஆதர வளிக்க வேண்டும், நினைத்ததை செய்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்” தற்போதுவரை ஒலிம்பிக்கில் சேர்க்கப் படாத பளுதூக்குதலில் வருங்காலத்தில் அங்கீகரிக்கப்பட்டால், ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் சார்பாக பங்கேற்று பதக்கம் வெல்வதே தனது நீண்டகால இலக்கு” ஆர்த்தி பளுதூக்கும் வீராங்கனையாக மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பொறியாளரா கவும் பணிபுரிகிறார்.
நன்றி : பிபிசி தமிழ்