tamilnadu

img

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடத்திய மோதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் உயிரிழப்பு 

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்க நடந்த சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள், ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அத்துடன் தீவிராவதிகளின் ஊடுருவல் முயற்சியையும் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் கேரன் செக்டார் பகுதியில் ரோந்து சென்ற ராணுவத்தினர் மீது, திடீரென மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை ராணுவ செய்தி தொடர்பாளர் உறுதிபடுத்தி உள்ளார்.