ஜப்பானின் 500 ஆண்டுகள் பழமையான ஷூரி அரண்மனையில் ஏற்பட்ட தீவிபத்தில், அரண்மனையின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துள்ளன.
ஜப்பானின் ஒகினாவா தீவின் தலைநகரான நஹாவில் அமைந்துள்ளது ஷூரி அரண்மனை, சர்வதேச பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது. மரத்தால் கட்டமைக்கப்பட்ட அந்த அரண்மனையில் இரண்டாம் உலகப் போரில் முற்றிலும் சிதைந்த ஷூரி அரண்மனை, 1990ஆம் ஆண்டில் சீரமைக்கப்பட்டது. கடந்த 1970-ஆம் ஆண்டு வரை ஒகினாவாவின் மிக பெரிய பொது பல்கலைக்கழகமாக இருந்தது. அதன் பின் சுற்றுலா தளமாக மாற்றப்பட்டது. இந்த ஷூரி அரண்மனையில், இன்று அதிகாலை 2.30 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு விரைந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 10 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் அரண்மனையின் 4,200 சதுர மீட்டர் பரப்பிலான பகுதிகள் சேதமடைந்துள்ளன.