tamilnadu

img

கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

சேலம், பிப். 5- தலைவாசலில் புதிதாக அமைய உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி யில் இந்த கல்வி ஆண்டில் இருந்தே மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டு செயல்பட துவங்கும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடு மலை ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றிய கால்நடை பூங்கா  வளாகத்தில் வருகின்ற பிப்.9ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வைத்து, விவசாய பெருவிழாவை துவக்கி வைக்க உள்ளார். இந்த விழாவை முன்னிட்டு விழா முன்னேற்பாடு பணிகளை கால்நடை  துறை  அமைச்சர்  உடுமலை கே.ராதாகிருஷ்ணன் புதனன்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகை யில், தெற்காசியாவிலேயே மிகப் பெரிய அளவிற்கு அமைய உள்ள கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு வருகிற பிப்.9 ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி வைக்க உள்ளார். இந்த கால்நடை பூங்கா வளர்ந்த நாடுகளில் உள்ளது போன்று சிறப்பாக அமைய இருப்ப தாக அவர் தெரிவித்தார். மேலும், அனைத்து நாட்டு இன மாடுகள் மற்றும் ஆடு உள்ளிட்ட செல்லப் பிராணிகளை உருவாக்கும் முயற்சியும், மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு போன்ற பல திட்டங்களும் இங்கு ஏற்படுத்தப்பட உள்ளது. தமி ழகத்தில் உள்ள அனைத்து விவசா யிகள் மற்றும் சிறு, குறு விவசாயி கள் வருமானம் அதிகரிக்க பயிற்சியும் அளிக்க இந்த கால்நடை பூங்காவில் வழி வகை செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், தலைவா சலில் புதிதாக அமைய உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி இந்த கல்வி ஆண்டில் இருந்து மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டு 40 மாண வர்களுடன் துவங்கும் என தெரிவித் துள்ளார்.