சேலம், ஜூலை 23- சேலம் மாவட்டத்தில் பொதுமக்களிடையே புத்தக வாசிப்பை அதிகப்படுத்தும் வகையில் ‘‘சேலம் புத்தகத் திருவிழா 2019 ’’ நடைபெற்று வருகிறது. சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ‘‘சேலம் புத்தகத் திருவிழா 2019’’ நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழா மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் முன்னணி பதிப்பகமான பாரதி புத்தகாலயம் உள்ளிட்ட பதிப்பங்களின் அரங்குகள் அமைக்கப்பட் டுள்ளது. இதில் அரசியல், பொருளாதாரம், தத்துவம், தலைவர்கள் வாழ்க்கை வரலாறு, குழந்தைகளுக்கான புத்தகங்கள், சிறுகதை தொகுப்புகள், அறிவியல் வழிகாட்டிகள் உள்ளிட்ட அனைத்து வகையான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.