சேலம், மார்ச் 9- சேலம் அருகே, வடமாநிலத் தைச் சேர்ந்த இளம் தம்பதி உள்பட மூன்று பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், திருமலைகிரி அருகே உள்ள பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பட்டறையை சொந்தமாக நடத்தி வருகிறார். இவ ரிடம் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். தங்கராஜூவின் வீட்டுக்குப் பின் பகுதியில் உள்ள தோட்டத்தில், தன்னிடம் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்களை தங்க வைத்திருந்தார். தங்கராஜூவின் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்த ஆக்ராவைச் சேர்ந்த ஆகாஷ், அவருடைய மனைவி வந் தனா, அவர்களுடைய பத்து மாத குழந்தையுடன் ஒரு வீட்டில் தனி யாக வசித்து வந்தார். ஆகாஷின் உற வினர் சன்னி என்பவரும் அவர்களு டனேயே தங்கி இருந்தார். வட மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் உள்ளிட்ட மேலும் சிலர் மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சனியன்று ஆக்ரா வில் இருந்து வினோத் உள்பட நான்கு பேர் புதிதாக தங்கராஜூ வின் வெள்ளிப்பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தனர். இந்த நான்கு பேரும், தினேஷூம் அவரு டைய நண்பர்களும் தங்கியிருந்த வீட்டிலேயே தங்க வைக்கப்பட்ட னர். ஞாயிறன்று ஆகாஷ் மற்றும் அவருடைய மனைவியும் தங்கி இருந்த வீட்டின் கதவு வெளிப்பக்க மாக தாழிடப்பட்டு இருந்தது. வீட்டுக்கு வெளியே தொட்டிலில் போடப்பட்டிருந்த அவர்களுடைய குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அக்கம் பக்கத் தினர் அங்கு வந்தனர். வெளிப்பக்க மாக தாழிடப்பட்டு இருந்த கத வைத் திறந்து பார்த்தபோது, வந் தனா கழுத்து அறுக்கப்பட்ட நிலை யில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்த னர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள் கையில் வீட்டின் பின்புறம் 300 அடி தொலைவில் உள்ள தோட்டத்தில் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன் ஆகாஷ் மற்றும் அவ ரின் உறவினர் சன்னி ஆகிய இருவ ரும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததை கண்டு மேலும் அதிர்ச்சிய டைந்தனர். இதையடுத்து மாநக துணை ஆணையர் தங்கதுரை மற்றும் உதவி ஆணையர்கள் உள் ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசா ரணை நடத்தினர். இதன்பின் மூன்று பேரின் சடலங்களும் கைப்பற்றப் பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், ஆகாஷூம் அவரு டைய மனைவியும் ஞாயிறன்று வீட் டின் பின்னால் உள்ள தோட்டத்தில் குடிநீர் பிடித்து வருவதற்காகச் சென்றனர். சன்னியும் அவர்களு டன் இருந்துள்ளார். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற வினோத் தும், கூட்டாளிகளும் அவர்களிடம் வேண்டுமென்றே தகராறில் ஈடுபட் டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த கும்பல், ஆகா ஷையும் அவருடைய உறவினர் சன்னியையும் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டி படு கொலை செய்தனர். பின்னர், வந்தனாவை தூக்கிச்சென்ற அவர் கள், அவருடைய வீட்டில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ள னர். பின்னர் அவரையும் கத்தி யால் சரமாரியாக குத்திகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றிருப்பது தெரியவந்தது. மேலும், ஆகாஷ் மற்றும் வினோத் ஆகியோரிடையே ஏற்க னவே முன்விரோதம் இருந்து வந்தி ருக்கலாம் என்றும், இந்தக் கொலை யில் வினோத் உள்ளிட்ட ஆறு பேர் ஈடுபட்டிருக்கலாம் எனக்கருதும் காவல்துறையினர் அவர்களை தீவி ரமாக தேடி வருகின்றனர். இச்சம்ப வம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை யும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள் ளது.