இளம்பிள்ளை, அக். 19- இளம்பிள்ளையில் இருந்து ஓமலூருக்கு சென்று வந்த அரசு பேருந்தை மீண்டும் இயக்க அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் இருந்து ஓம லூருக்கு கடந்த ஆண்டு O-16ஏ என்ற எண் கொண்ட அரசு பேருந்து சேவை துவங்கப்பட்டது. இந்த பேருந்தானது, இளம்பிள்ளை, காடையாம்பட்டி, கே.கே.நகர், பரமகவுண்டனூர், இ.மேட்டுக்காடு, சிட்டனூர், கோட்டைமேடு, கே.ஆர்.தோப்பூர், முத்து நாயக்கன்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக ஓமலூர் வரை சென்றடையும். இந்த பேருந்தில் விசைத்தறி நெசவாளர்கள், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், பொது மக்கள் என நாள்தோறும் நூற்றுக்கும் மேற் பட்ட பயணிகள் சென்று வந்தனர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் நிறுத்தப் பட்ட அரசு பேருந்து சேவை மீண்டும் துவங்கியுள் ளது. ஆனால், இளம்பிள்ளை - ஓமலூர் இடையே இயங்கி வந்த அரசு பேருந்தானது இயக்கப்படாமல் இருந்து வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரம மடைந்து வருகின்றனர். மேலும், இடங்கணசாலை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் கள் பேருந்து வசதி இல்லாததால் நடந்தே பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் அவலநிலை நீடித்து வருகிறது. எனவே, சேலம் மாவட்டப் போக்குவரத்து துறையினர் உடனடியாக இந்த வழித்தடத்தில் மீண் டும் அரசு பேருந்தை இயக்க வேண்டும் என அப்பகுதி யினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.