tamilnadu

img

நெடுஞ்சாலை மையத் தடுப்பால் அடிக்கடி விபத்து தடுப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

 இளம்பிள்ளை, டிச. 5- சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேருந்து நிலையம் முன்பாக உள்ள மைய தடுப்பால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க மைய தடுப்பை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேருந்து நிலையம் முன்பாக காக்காபாளையம் மெயின் ரோட்டில் மைய தடுப்பை நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி வளைவாக உள்ளதால் பேருந்து, லாரி, வேன் உள்ளிட்டவை திரும்ப முடியாமல் மைய தடுப் பில் மோதி விபத்துக்குள்ளாகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  மேலும் இதன் அருகே மகுடஞ்சாவடி காவல் உதவி மையமும் செயல்படுகிறது. இவ்விடத்தில் நிழல் கூட இல்லாததால் சாலையோரத்தில்  பயணிகள் கூட்டம் அதிகம் நிற்கின்றனர். இந்நிலையில் பெரிய விபத்து ஏற்படும் முன் மைய தடுப்பை  அகற்றுமாறு பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் மாவட்ட நெடுஞ்சாலை துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.