tamilnadu

img

போனஸ் மற்றும் முன் பணம் வழங்குக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.30- போனஸ் மற்றும் முன் பணம் வழங்கக்கோரி அரசுப் போக்கு வரத்து தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில் பணி யாற்றும் அனைத்து தொழிலா ளர்களுக்கும் போனஸ் மற்றும் முன் பணம் வழங்கிட வேண்டும். ஊதியப் பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். டிஏ உயர்வை ரத்து செய்யக்கூடாது. போக்குவரத்தை தனியார்மய மாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அரசு போக்கு வரத்து கழக அனைத்து தொழிற் சங்கத்தினர் பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மணக்காடு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு அரசு விரைவு போக்குவ ரத்து சங்கத்தின் கிளை செயலா ளர் சந்திரன் தலைமை வகித்தார்.

இதில்,  மாநில துணைப் பொதுச் செயலாளர் என்.முருகேசன், சிஐ டியு சாலைப் போக்குவரத்து மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க சேலம் கோட்ட செயலாளர் கிருஷ் ணமூர்த்தி, ஐஎன்டியுசி சார்பில் கிருஷ்ண மூர்த்தி,  துணைச்செய லாளர் செந்தில் குமார், கோட்ட தலைவர் செம்பான், பொருளாளர் சேகர், எல்பிஎஸ் சார்பில் வெங்க டாச்சலம் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.  இதேபோல், சேலம் கோட்டத் தில் உள்ள மெய்யனூர், பள்ளப் பட்டி, எருமாபாளையம், வாழப் பாடி, ஓமலூர், ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி உள்ளிட்ட 15க்கும் மேற் பட்ட பணிமனைகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்கு வரத்து தலைமை பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில்  சிஐடியு, எல்பிஎப், ஏஐடி யுசி, எச்எம்எஸ், எம்எல்எப், பணி யாளர் சங்கம், ஏஏஎல்எல்எப் என தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் உட்பட திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.