இளம்பிள்ளை, நவ.8- சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த மகுடஞ்சாவடி வட்டார வேளாண் மைத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் சனி யன்று விவசாயிகளுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு அறுவடை பின் செய் நேர்த்தி, மதிப்பு கூட்டுதல் மற்றும் தொடர் விநியோக மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மகுடஞ்சாவடி வேளாண்மை உதவி இயக்குநர் மணி மேகலா தேவி கூறுகையில், சிறுதானியம், பயறு வகைபயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களை மதிப்பு கூட்டி விற்பதன் மூலம் அதிக வருமானம் பெறலாம். எனவே, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் நவீன தொழில் நுட்பங்களை அறிந்து அதனை செயல்படுத்திட பயிற்சிக்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலு வலர் பழனிசாமி, அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் விஜயகுமார் கலந்து கொண்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடு களை அட்மா திட்ட அலுவலர் கார்த்தி கேயன் மற்றும் மகேந்திரன் ஆகியோர் செய்தனர். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.