காவலர் பணிக்கான தேர்வு: எஸ்.பி.ஆய்வு
நாமக்கல், ஆக.19- இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு வரும் 25-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அதற்கான மையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஞாயிறன்று ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்புப் படை வீரர்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 25 ஆம் தேதி நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டதில், இத்தேர்வை 4,570 பேர் எழுதுகின்றனர். இதில், ஆண்கள்- 4,094, பெண்கள் 475 மற்றும் திருநங்கை ஒருவர் இடம் பெற்றுள்ளனர். காலை 10 மணி முதல் 11.20 மணி வரை, திருச்செங்கோடு எளையாம்பாளையம், விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் இந்த தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு மையத்துக்கு தேர்வர்கள் வருவதற்கு ஏதுவாக விவேகானந்தா கல்வி நிறுவன கல்லூரிக்கு 25 ஆம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை, நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேர்வு எழுதுபவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மையத்தில் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு ஞாயிறன்று பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
மலைப்பாதையில் பாறை சரிந்து போக்குவரத்து பாதிப்பு
ஏற்காடு, ஆக.19- சேலம் மாவட்டம், ஏற் காட்டில் கடந்த சில தினங் களாக இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் சாரல் மழை யால், கெண்டப்பநாய்க்கன் பட்டி வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதை யின் 60 அடி பாலம் அருகில் ராட்சத பாறைகள் சரிந்து சாலையின் நடுவே விழுந் தது. மேலும் சில இடங் களில் சிறு, சிறு பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற் பட்டது. இதனை நெடுஞ் சாலைத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இதையடுத்து போக்குவ ரத்துசரிசெய்யப்பட்டு அவ்வழியாக வாகனங் கள் இயக்கப்பட்டன.