tamilnadu

img

ஒரே ஊராட்சியில் 15 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா !

சேலம், செப். 1- ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பிபாடி ஊராட்சியில் உள்ள வார்டுகளுக்கான நிதியை ஒதுக்கா ததால் வார்டு உறுப்பினர்கள் 15 பேர் ராஜினாமா செய் வதாக கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கடிதத்துடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட தும்பிபாடி ஊராட்சியில் 15 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் துணைத்தலைவர் உட்பட அனைத்து வார்டு உறுப்பினர்களும் தங்களது வார்டு பகு திகளில் எவ்வித நலத்திட்டங்களும் செய்யவில்லை என்று  புகார் தெரிவித்து பதவியை ராஜினாமா செய்ய கடிதத்து டன் வந்தனர். அப்போது, ஊராட்சி மன்றத் தலைவர் எவ் வித நிதியும் அரசிடமிருந்து வாங்கி தரவில்லை எனவும், சாலைகள் அமைக்க நிதி வந்தாலும் உரிய முறையில் ஏன் பிரித்து கொடுப்பதில்லை என தலைவரிடம் கேள்வி எழுப் பினர்.

  இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி அவர்களை சமாதானம் செய்து இனிமேல் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என  வாக்குறுதியளித் தார். இருந்தும், சமாதானம் அடையாத வார்டு உறுப்பினர் கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தனர். ஒரே ஊராட்சி யில் 15 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.