சேலம், ஜூன் 22- சேலம் பச்சப்பட்டி, தாதம்பட்டி, சங்கிலி ஆசாரி காடு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தமிழ்நாடு இளைஞர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாநகர பகுதிக்கு உட்பட்ட பச்சப்பட்டி, தாதம் பட்டி, சங்கிலி, ஆசாரி காடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே தமிழ்நாடு இளைஞர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த, ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பாளர் அருண் சோரி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.