இளம்பிள்ளை, செப்.21- சேலம் மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளார்களுக்கு கொரோனா பரிசோ தனை நடைபெற்று வருவதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பெருமா கவுண்டம்பட்டி ஊராட்சிப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கீழ் வேலை பார்க்கும் 54 பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை 100 நாள் வேலை நடைபெறும் இடத்திலேயே திங்களன்று நடைபெற்றது. இதனை சேலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் பிரேமலதா சதீஷ், துணைத்தலைவர் வடிவேல், ஒன்றிய கவுன்சிலர் சாஸ்தா, ஊராட்சி செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.