tamilnadu

img

உலக யோகா தினம்: மாணவர்கள் புதிய சாதனை

சென்னை, ஜூன் 23 - மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளி யன்று (ஜூன் 21) உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வையொட்டி எம்.எஸ்சி.யோகா பயிலும் 2ஆம் ஆண்டு மாணவியான எஸ்.பிரியதர்ஷினி, யோகா மற்றும் யோகா சிகிச்சைத் துறையைச் சார்ந்த எம்.எஸ்சி.யோகா தெரபி பயிலும் 2ஆம் ஆண்டு  மாணவர் எம்.ராஜேஷ் ஆகியோர் யோகா வில் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ள னர்.

பிரசரித பாத உத்தாசனா என்ற ஆச னத்தில் 50 நிமிடங்கள் 51 வினாடிகள் நிலைத்து நின்று முன்பு நிகழ்த்தப்பட்ட 25  நிமிடங்கள் 1 வினாடி என்ற சாதனையை பின்னுக்கு தள்ளி மாணவி எஸ். பிரியதர்ஷினி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம் பிடித்துள்ளார். 2022ஆம் ஆண்டில் ஏக பாத ராஜக போதாசனம் என்கிற ஆசன நிலையில் தொடர்ந்து 60 நிமிடங்கள் இருந்ததன் மூலம் பிரியதர்ஷினி, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சலம்ப சிரசாசனா கோனாசனா’ என்ற ஆசன நிலையில் 12 நிமி டங்கள் 1 வினாடி நேரம் தொடர்ந்து நின்ற தன் மூலம் மாணவர் எம்.ராஜேஷ் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் இடம் பிடித்துள் ளார்.

4 நிமிடங்கள் 25 நொடிகள் என்ற நின்ற  முந்தைய சாதனையை முறியடித்து உள்ளார். இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோமதி ராதாகிருஷ்ணன், சார்பு வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணை வேந்தர் ஆர்.எஸ், நீலகண்டன், சார்பு துணைவேந்தர் சி.கிருத் திகா, பதிவாளர் வி.சுரேகா, கல்லூரி  முதல்வர் வே.சுப்புலட்சுமி, யோக சிகிச்சை  நிபுணர் முனைவர் என்.சந்திரசேகரன், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் தீர்ப்பு நடுவர் விவேக் ஆர் நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.