பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ
ரயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லி-போரூர் 9 கிமீ தூரத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் லிஃப்ட் களை நிறுவத் தொடங்கியுள்ளது. இதற்கான பணிகள், செப்டம்பருக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்த னர். இதையடுத்து, சென்னையில் தயாரிக்கப் பட்ட 40 மின்தூக்கிகளையும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 60 எஸ் கலேட்டர்களையும் மெட்ரோ ரயில் அதிகாரி கள் கையகப்படுத்தியுள்ளனர். முதல் ரயில்நிலையம் இந்த பாதையில் போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம்தான் முதலாவ தாக அமைக்கப்படுகிறது. அங்கு புதிய எஸ்க லேட்டர்கள் அமைக்கப்படும் என்றும், தற்போது மின்தூக்கி அமைக்கும் பணி நடை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரி வித்தனர். அதைத் தொடர்ந்து, காட்டுப் பாக்கம் மெட்ரோ மற்றும் தெள்ளியரகரம் மெட்ரோ ரயில்கள் அடுத்ததாக மேம்படுத் தப்படும். ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ வழிதட ரயில் நிலையங்களில் போதுமான எஸ்கலேட்டர்கள் இல்லை என்று பல பயணிகள் புகார் கூறிய நிலையில், அடுத்த கட்டத்தில் சிக்கலை சரிசெய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பூந்தமல்லி-போரூர் வழித்தடத்தில் அனைத்து இடங்களி லும் மின்தூக்கிகள் நிறுவப்பட்டு, பயணி கள் எளிதாக அணுகுவதை உறுதிசெய்ய திட்டமிட்டுள்ளது. இட நெருக்கடி காரண மாக, சில நிலையங்களில் இறங்குவதற்கு எஸ்கலேட்டர்கள் இல்லாமல் இருக்கலாம் என்று சிஎம்ஆர்எல் அதிகாரிகள், குறிப்பிட்ட னர். ஆனால் மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லக்கூடிய வகையில் முயற்சிகளை மேற்கொள்வதை உறுதி செய்துள்ளோம் என்று அவர்கள் கூறினர்.