சென்னை,மே 7 ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் மெட்ரோ ரயில்களை இயக்க தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க மெட்ரோ ரயில் நிலையங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு தடை உத்தரவால் மெட்ரோ ரயில் சேவை கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ரயில் சேவை தொடங்கு வதற்கான அனைத்து ஏற்பாடு களையும் மெட்ரோ ரயில் நிர்வா கம் செய்து வருகிறது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் மெட்ரோ ரயில்களை இயக்க தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க மெட்ரோ ரயில் நிலையங்களில் சில கட்டுப்பாடு கள் விதிக்க திட்டமிடப் பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்க ளில் ஒரு நுழைவுப் பாதையில் மட்டுமே பயணிகள் அனுமதிக் கப்படுவார்கள். அனைத்து பயணி களும் தெர்மல் கருவி மூலம் பரி சோதனை செய்யப்படுவார்கள்.
கைகளில் சானிடைசர் தெளிக் கப்படும். சமூக இடைவெளி பின்பற்றப் பட்டு பயணிகள் வரிசையாக ரயில் நிலையங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மெட்ரோ ரயில் பெட்டியில் 5 பேர் இருக்கக் கூடிய இருக்கையில் 2 பேரும், 2 பேர் இருக்கக் கூடிய இருக்கையில் ஒருவரும் அமர வும் அறிவுறுத்தப்படுவார்கள். ரயிலில் நின்று பயணம் செய்ய கொஞ்சம் பேர் மட்டுமே அனு மதிக்கப்படுவார்கள். இது போன்ற கட்டுப்பாடுகளுடன் மெட்ரோ ரயிலை இயக்க திட்ட மிட்டு வருகின்றனர். ஊரடங்குக்கு முன்பு காலை மற்றும் மாலை பரபரப்பான நேரத்தில் 5 நிமிடத்துக்கு ஒரு சேவை இயக்கப்பட்டது. ஊர டங்கு தளர்வு செய்யப்பட்ட பிறகு சேவை தொடங்கும் போது 3 நிமி டத்துக்கு ஒரு ரயிலை இயக்க திட்டமிடுகிறார்கள். மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுவதும் கிருமிநாசினி தெளிக் கப்பட்டு தூய்மையாக வைக்க வும், ரயில் பெட்டிக்குள் இருக்கை கள், கைப்பிடிகள் போன்றவற்றி லும் கிருமி நாசினி தெளித்து பாது காப்பாக பயணத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.