tamilnadu

ஸ்மார்ட்போன் அதிக பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? பெற்றோர், குழந்தைகள் இடையே விழிப்புணர்வு!

சென்னை, டிச. 6- அதிக நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத் துவதால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பது குறித்து குழந்தைகளிடமும் பெற்றோ ரிடமும் ‘விவோ ஸ்விட்ச் ஆப் 2024’ என்னும் ஆய்வை விவோ இந்தியா நடத்தியது. 'பெற்றோர் - குழந்தை உறவுகளில் ஸ்மா ர்ட்போன்களின் தாக்கம்' என்று தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அதிகப்படியான மற்றும் கட்டுப்பாடற்ற ஸ்மார்ட்போன் பயன் பாடு குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இடையிலான பிணைப்பை எவ்வாறு மோசமாக பாதிக்கிறது என்பதை அறிய உதவியது.

 அனைவரும் பொறுப்பான முறையில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த ஆய்வை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் துவக்கி விவோ  நடத்தி வருகிறது. பெற்றோர் மற்றும் குழந் தைகளின் அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது.  ஆய்வின்படி, பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் ஒருவருக்கொருவர் நெருங்கிய உறவுக்காக ஏங்குகிறார்கள், ஆனால் இருவரும் அதிகப்படியான ஸ்மா ர்ட்போன் பயன்பாட்டை குறைக்கத் தயா ராக இல்லை என்று தெரிய வந்துள்ளது.

சரா சரியாக, பெற்றோர் தங்கள் ஸ்மார்ட் போன்களில் தினமும் ஐந்து மணி நேரத் திற்கும் மேலாகவும், குழந்தைகள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக செலவிடு கிறார்கள். குறிப்பாக 73 சதவீத பெற்றோர் களும் 69 சதவீத குழந்தைகளும் தங்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக ஸ்மார்ட்போன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பெற்றோர் மற்றும் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கு பேர் உல்லாசப் பயணங்கள், விடுமுறைகள் அல்லது கொண்டாட்டங்களில்கூட ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

இருவரும் அதிகப் படியான ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் எதிர்மறையான பாதிப்பை ஒப்புக் கொண்டாலும், பெற்றோரைக் காட்டிலும் குழந்தைகள் அதிக அளவில் அறிந்திருக்கி றார்கள் என்பதையும் இந்த ஆய்வு தெரி விக்கிறது.  மேலும், தங்கள் பெற்றோருக்காக ஒரு போனை வடிவமைக்கச் சொன்னபோது, சுமார் 94% குழந்தைகள் அழைப்பு, கேமரா மற்றும் செய்தி அனுப்புதல் போன்ற அம்சங்களை மட்டுமே  வலியுறுத்தினர்  என்று  விவோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாகி கீதாஜ் சன்னானா கூறியுள்ளார்.