tamilnadu

img

குடிநீர் வாரியத்தில் ஒன்றுபட்ட போராட்டத்தை தொடர்வோம்

பாராட்டு விழாவில் தொழிற்சங்கத் தலைவர்கள் பேச்சு  

சென்னை, நவ. 10 - குடிநீர் வாரியத்தில் ஒன்றுபட்ட தொழிலாளர் போராட்டத்தை தொடர்வோம் என்று தலைவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.   சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணியாற்றும் தினக்கூலி, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அதுவரை மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச கூலியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக தினக்கூலி தொழிலாளர்கள் 258 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணி நிரந்தரம் கிடைக்க உதவி புரிந்தோருக்கு சனிக்கிழமையன்று (நவ.9) சிந்தாதரிப்பேட்டையில் பாராட்டு விழா நடைபெற்றது. நடத்திய இந்நிகழ்வில்,  மூத்த தொழிற்சங்கத் தலைவர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேசுகையில், குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்றுபட்டு போராடிய தால்தான் 258 பேருக்கு பணிநிரந்தர ஆணை பெற முடிந்துள்ளது என்றார். கோவையை போன்று சென்னை யிலும் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு கொடுக்கும் அபாயம் உள்ளது. அவ்வாறு நடந்தால் பெரிதும் பாதிக்கப்படுவது நிரந்தர தொழிலாளர்கள்தான். எனவே, அனைத்துப் பிரிவு தொழிலாளர்க ளும் ஒன்றுபட்டு நின்று போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி னார்.

க.பீம்ராவ்

முன்னதாக நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய சங்கத்தின் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி 8 வருட மாக பலகட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தியதால் பணி நியமன ஆணை கிடைத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் இறந்த தொழிலாளர்களின்  வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வாங்கித் தர முடிந்தது என்றார். உபகரணங்கள், மருத்துவ உதவி, ஊதிய உயர்வு, ஓய்வூதி யம் போன்ற கோரிக்கைகளுக்காக அடுத்தகட்ட போராட்டத்தை நடத்து வோம். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டங்களை மேற்கொள்வோம் என்றும் கூறினார். இந்நிகழ்வில் சிஐடியு அகில இந்திய மாநாட்டிற்கு முதற்கட்ட மாக 55 ஆயிரம் ரூபாயை சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணனிடம், சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பழனி வழங்கினார். நிகழ்வில் சங்கத்தின் துணைத்தலைவர் சி.சத்யநாதன், பொருளாளர் டி.ஞானபிரகாசம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.தாமு உள்ளிட்டோர் பேசினர்.