சென்னை, செப்.5- தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்ட ணியை நாங்கள் யாரும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று தமிழக அமைச்சரும் திமுக முதன்மைச்செயலாளருமான கே.என்.நேரு கூறி னார்.
இதுதொடர்பாக செப்டம்பர் 5 வியாழக் கிழமையன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.என்.நேரு, “கூட்டணி பற்றி நான் பேசியதை திரித்து தவறாக வெளியிட்டுள்ளனர். எங்கள் கூட்டணி சரியான கூட்டணி. திமுக தலைவர் எங்கள் கூட்டணியை எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டார்.
கூட்டணியை நாங்கள் யாரும் விட்டுக் கொடுக்கப்போவதில்லை. எங்கள் கூட்டணி அருமையான கூட்டணி. கூட்டணிக் கட்சி தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகிக்கொண்டு உள்ளனர். வேண்டும் என்றே நான் பேசியதை மாற்றி வெளியிட்டுள்ளனர்”என்று தெரிவித்தார்.