வேட்டைக்காரன், எஸ்.சி மக்களுக்கு கணினி பட்டா வழங்கப்படும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் உறுதி
திருவள்ளூர், ஜூன் 4- வேளாகாபுரம் ஊராட்சியில் உள்ள வேட்டைக்காரன் மற்றும் ஆதிதிராவிடர் இன மக்க ளுக்கு கணினி பட்டா வழங்கப்படும் என ஊத்துக்கோட்டை வட்டாட்சி யர் உறுதியளித்தால் ஜூன் 4 அன்று நடைபெறயிருந்த போராட்டம் கைவிடப் பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த வேளாகாபுரம் ஊராட்சியில் வேட்டைக் காரன் இனத்தை சேர்ந்த 50 குடும்பங்கள் உள்ளன. ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.இவர்கள் கிராம நத்தம் நிலத்தில் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களை தொடர்ந்து 1994, 2023, 2025 ஆம் ஆண்டுகளில் மூன்று தவணைகளாக ஒரு சிலருக்கு மட்டும், பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்த பட்டாக்கள் எதையும் கணினியில் பதிவேற்றம் செய்யாததால் பயனற்று கிடக்கிறது. அதுவும் ஒரு குடும்பத்திற்கு ஒரு செண்டு வீதம் அரசு பட்டா வழங்கியுள்ளது. இதில் அரசின் தொகுப்பு வீடுகள் கூட கட்ட முடியாது. ஆடு, மாடு, கோழி மற்றும் மரம், செடி, கொடி போன்ற எதை யும் வளர்க்க முடியாது. குடும்பத்திற்கு 5 செண்டு நிலமாவது விண்ணப்பிக்கப் பட்ட அனைவரும் வழங்க வேண்டும். அதுவும் கணினி பட்டாவாக வழங்க வேண்டும் என வலி யுறுத்தினர். கணினி பட்டாவோடு தான் வீடு திரும்ப வேண்டும் என்ற முடிவில் ஜூன் 4 அன்று ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என திட்டமிட்டனர். இந்த நிலையில் ஊத்துக் கோட்டை வட்டாட்சியர் ஆ.ராஜேஷ்குமார் செவ்வாயன்று(ஜூன் 3) சங்க தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வேட்டைக்காரன் இனத்தை சேர்ந்த 43 குடும்பங்களுக்கும், ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த 92 குடும்பங்கள் என மொத்தம் 135 குடும்பங்க ளுக்கு தலா இரண்டரை செண்டு வீதம் கணினி பட்டா அடுத்த 15 நாட்க ளில் வழங்கப்படும் என வட்டாட்சியர் உறுதி யளித்தால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை யில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்தமிழ் அரசு, ஒன்றிய செயலாளர் கே.முருகன், வேட்டைக் காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதுரை, மாவட்டத் தலைவர் டி.டில்லி, கிராம மக்கள் முனுசாமி, செல்வி, அம்சா, ஜெயராமன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.