திருபெரும்புதூர், ஜூன் 4- திருபெரும்புதூர் தொகுதியில் கடைசியாக கிடைத்த தகவல்படி திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு வெற்றி முகப்பில் இருந்தார். திருபெரும்புதூர் மக்க ளவைத் தொகுதி 1962ல் உரு வானது. இந்த தொகுதியின் முதல் மக்களவை உறுப்பினராக திமுகவை சேர்ந்த பி.சிவசங்கரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1967ஆம் ஆண்டும் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 1971ல் டி.எஸ்.லட்சு மணன் (திமுக), 1977ல் சீராளன் ஜெக நாதன் (அதிமுக), 1980ல் டி.நாகரத்தினம் (திமுக), 1984, 89, 91 களில் மரகதம் சந்திர சேகரன் (காங்கிரஸ்), 1996ல் டி.நாக ரத்தினம் (திமுக), 1998ல் கே.வேணு கோபால் (அதிமுக), 1999, 2004 களில் ஏ.கிருஷ்ணசாமி (திமுக), 2009ல் டி.ஆர்.பாலு (திமுக), 2014ல் கே.என்.ராமச்சந்திரன் (அதிமுக), 2019ல் டி.ஆர்.பாலு (திமுக) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தற்போதைய திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி, திருபெரும்புதூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், மதுர வாயல், அம்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த தேர்தலில் டி.ஆர்.பாலு (திமுக), ஜி.பிரேம்குமார் (அதி முக), வி.என்.வேணு கோபால் (தமாகா (மூ)), வி.ரவிச்சந்திரன் (நாதக) உள்ளிட்டு 31 பேர் போட்டியிட்டனர். 23 லட்சத்து 82 ஆயிரத்து 119 வாக்காளர்களில், 14 லட்சத்து 35 ஆயிரத்து 243 பேர் வாக்களித்தனர். இது மொத்த வாக்காளர்களில் 60.25 விழுக்காடு ஆகும். இந்த வாக்குகள் குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி வளாகத்தில் எண்ணப்பட்டது.
27 சுற்றுகள் வாக்குகள் எண்ணப் பட்டன. இதில் 6 லட்சத்து 92 ஆயிரத்து 746 வாக்குகள் பெற்று டி.ஆர்.பாலு முன்னி லையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் ஜி.பிரேம்குமார் 2 லட்சத்து 50 ஆயிரத்து 360 வாக்குகளும், தமாக (மூ) வேட்பாளர் வி.என்.வேணுகோபால் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து வாக்குகளும், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் வி.ரவிச்சந்திரன் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 521 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் இருந்தனர்.