tamilnadu

சென்னை, திருநெல்வேலி முக்கிய செய்திகள்

பழுதடைந்த மின்விளக்குகள்: இருள் சூழ்ந்து சானடோரியம் மேம்பாலம்
தாம்பரம், ஆக.24- தாம்பரம் சானடோரியம் மேம்பாலத்தில் மின்விளக்கு கள் பழுதடைந்துள்ளதால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால, வாகன ஓட்டிகள் விபத்து பீதியில் செல்கின்றனர். தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து சிட்லபாக்கம், அஸ்தினா புரம், கிழக்கு தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் சானடோரியம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.  இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் பழுதடைந்து பல நாட்களாக எரியாத தால், இரவு நேரங்களில் மேம்பாலம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படு கிறது.  இதனால் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரி களிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், ‘நான் சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வருகிறேன். கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றேன். தினமும் வேலைக்கு சென்று விட்டு இரவு 8:30 மணியள வில் இந்த மேம்பாலம் வழியா கத்தான் வீட்டிற்கு செல்வேன். இந்த மேம்பால த்தில் பலநாட்களாக மின்விளக்குகள் எரியாத தால் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டி செல்ல சிரமமாக உள்ளது. அதுமட்டும் இன்றி தினமும் மேம்பாலம் வழியாக செல்லும்போது ஏதாவது ஒரு வாகன ஓட்டி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும்’ என்றார். 

வள்ளியூரில் காவல் நிலைய மணரம்: வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும்  மனித உரிமை ஆணையத்திற்கு மாதர் சங்கம் கோரிக்கை 

திருநெல்வேலி, ஆக.24- நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்தில் விசாரணை க்கு அழைத்து வரப்பட்ட கன்னியா குமரி மாவட்டம் பூமத்திவிளையை சேர்ந்த லீலாபாய் வயது55,இரத்த வாந்தி எடுத்து இறந்ததாக பத்தி ரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனித உரிமை ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்திட தமிழக அரசை வலியுறுத்தி இயக்கம் நடத்திடவும் திட்டமிடப் பட்டுள்ளது என்று மாதர்சங்க மாநிலநிர்வாகி உஷாபாசி, நெல்லை மாவட்ட தலைவர் கே.பழனி, செயலாளர் பி.கற்பகம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மனித உரிமை ஆணையத்திற்கு மாதர் சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தீயணைப்பு துறை ஊழியர் கிறிஸ்டோபர்(56)என்பவர் மீது  சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையால் தேடப்பட்டுவந்தார்.இந்நிலை யில் அவருக்கு வேண்டப்பட்டவர் என்ற அடிப்படையில் குமரி மாவட்டம் பூமத்தி விளையை சேர்ந்த லீலாபாய் என்பவரை வள்ளியூர் பொறுப்பு காவல் ஆய்வாளர் அனிதா தலை மையிலான காவலர்கள் குழு ஆகஸ்ட் 17ஆம் தேதி விசாரணைக்கு வள்ளியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளது.  அன்று இரவில் லீலாபாயை விசாரணை செய்த நிலையில் அதி காலையில் ரத்த வாந்தி எடுத்த தாகவும் இதனால் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றதாகவும் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய தாகவும் பத்திரிகைகளில் செய்திவந்தன. காவல்துறை  பலமாக அடித்ததால் தான் லீலாபாய் இறந்தார் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருது கிறது. இதில் மனித உரிமைமீறப்பட்டு இருப்பது தெரிகிறது. பாலியல் புகாரில் கூறப் பட்டுள்ள கிறிஸ்டோபர் என்பவருக்கு எந்த வகையிலும் ரத்தஉறவு இல்லாதவரை நீதிமன்ற அழைப்பு ஆணை இல்லாமல் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.  காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் பெண்களை இரவில்  வைத்திருக்கக் கூடாது.எனவே லீலாபாயின் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை நடத்திடவும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தர விட கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.