அம்பத்தூர், மே 21- இணையத்தளம் டிரேடிங்கில் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்ற பேராசையில் ரூ. 1.36 கோடியை இழந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் வழக்கில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் 2 பேரை திங்க ளன்று கைது செய்தனர்.
பூந்தமல்லி அருகே காட்டுப் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (41). இவர் தகவல் தொழில்நுட்ப ஊழியர். அவரது முகநூலில் டிரேடிங் எப்படி செய்வது என்பது தொடர்பாக வந்த விளம்பரத்தை பார்த்து லைக் கொடுத்துள்ளார். கடந்த மே.11அன்று அவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு இணையத்தளம் டிரேடிங் குறித்து லிங்க் ஒன்று வந்துள்ளது. அதை கார்த்திக் திறந்து, டிரேடிங் தொடர்பான விவரங் களை பார்த்த போது, தனது நிறு வன வங்கி கணக்கு வாயிலாக உள்நுழைய (லாக் இன்) அனு மதி பெற்றுள்ளார்.
தொடர்ந்து, ரூ.4 லட்சம் முதலீடு செய்து, அதிலி ருந்து ரூ.36,000 திரும்ப எடுத்துள் ளார். இதையடுத்து, 10 விழுக்காடு தரகு போக, 300 விழுக்காடு லாபம் கிடைக்கும் 3 நிறுவனங்கள் டிரேடி ங்கில் இணைய விரும்புவதாக வாட்ஸ் ஆப் குழுவில் தெரிவித் துள்ளார். இந்நிலையில், தரகு தொகையான ரூ.28 லட்சம் செலுத் தாவிட்டால், வங்கி கணக்கு முடங்கிவிடும் என மர்ம நபர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து கார்த்திக் ரூ.28 லட்சத்தை வங்கி வாயிலாக செலுத்தியுள்ளார்.
மேலும், மர்ம நபர்கள் கொடுத்த பல்வேறு வங்கி கணக்கிற்கு பல தவணைகளில் ரூ.1.36 கோடி செலுத்தி பணத்தை இழந்துள் ளார். இதுகுறித்து கார்த்திக் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சென்னை பள்ளிக்கரணை, ராஜேஷ் நகரைச் சேர்ந்த ரமேஷ் குமார் (38), ராணிப்பேட்டை மாவட் டம், வாலாஜா வட்டம் நத்தம் கிரா மத்தைச் சேர்ந்த அருண் (30) என்பது தெரிய வந்தது. இதை யடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்த னர். மேலும் இந்த வழக்கில் தலை மறைவாக உள்ள சிலரை தேடி வரு கின்றனர்.