tamilnadu

img

பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!

சென்னையில் பணியின்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்த காவலர் ரவிக்குமார் (59) குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரவிக்குமார் (59) நேற்று காலை மீனம்பாக்கம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காலை 11.15 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையோரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். காவலர் ரவிக்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.