சென்னை,ஜூலை 7- செப்டம்பர் 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப் பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத் துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பேசிய தாவது: மகளிர் உரிமைத்தொகை திட்டம் தமிழக வரலாற்றில் மிகப் பெரிய திட்டம். இந்த மாபெரும் திட்டத்தை செயல்படுத்து வதற்கான முதல் கூட்டம் இது. தலைமுறை தலைமுறையாக பயனளிக்கப் போகும் திட்டம் இது. சமூக நீதி என்ற கோட்பாட்டுடன் இந்த அரசு செயல்படு கிறது. பெண்களின் உழைப்பு ஆண்க ளின் உழைப்புக்கு நிகராகவே இருக்கிறது. செப்டம்பர் 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப் படும். இத்திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பெயர் சூட்டப் பட்டுள்ளது. ஒரு கோடி விண்ணப்பங்களை ரேஷன் கடைகள் மூலம் விநியோகித்து திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். உரிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் இத்திட்டம் பயனாளிகளைச் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை யோரம் வசிப்பவர்கள், தூய்மைப் பணி யாளர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.