tamilnadu

img

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரச்சாரம்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் ஆர்.டி.சேகருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அ.சவுந்தரராசன் ஜீவா ரயில்நிலையம் அருகில் பிரச்சாரம் செய்தார். 

.................................


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் சனிக்கிழமையன்று (ஏப்.13) சோழிங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், பகுதிச் செயலாளர் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ உள்ளிட்டு கூட்டணிக்கட்சித் தலைவர்கள் உள்ளனர்.


.................................


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் கொளப்பாக்கம் ஊராட்சியில் வீதிவீதியாக பிரச்சாரம் செய்தனர். இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் தொடங்கி வைத்தார். ஆலந்தூர் பகுதிச் செயலாளர் எஸ்.அரிகிருஷ்ணன், சுந்தரம், கே.வி.சிவக்குமார், புண்ணியம், திமுக ஊராட்சி செயலாளர் முனு.ஆதித்தன், எஸ்.நெடுஞ்செழியன், எஸ்.கண்ணதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


.................................


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு-வுக்கு வாக்கு கேட்டு மதுரவாயல் பகுதி நெற்குன்றம் சிடிஎன் நகரில் (148வது வட்டம்) வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


;