வேலூர், ஜூலை 19- அரக்கோணம் நகராட்சி துப்புரவுப் பணி யாளர்கள் வார்டு பிரிவு மாற்றப்பட்டதைக் கண்டித்து ஆணையரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. 12 வார்டுகளுக்கு ஒரு துப்புரவு பிரிவு என 3 பிரிவுகள் உள்ளன. இதில் 124 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வந்த னர். இந்நிலையில் துப்புரவு பணிகளை தனி யார்மயமாக்க முடிவு செய்த நகராட்சி நிர்வா கம், முதல்கட்டமாக 2 பிரிவுகளை தனியார் மயமாக்கியது. இதையடுத்து அப்பிரிவுகளில் பணிபுரிந்த நகராட்சி துப்புரவுப் பணியா ளர்கள் தனியார்மயமாக்கப்படாத ஒரு பிரி வுக்கு மாற்றப்பட்டனர். இந்த உத்தரவு ஆணையரால் புதன்கிழமை பிறப்பிக்கப் பட்டது. இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஏ.பி.எம்.சீனிவாசன் தலைமை யில் ஆணையர் முருகேசனை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏபிஎம் சீனிவாசன், நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் பத்மநாபன், துப்புரவு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆகி யோருடன் நகராட்சி ஆணையர் முரு கேசன் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து கடிதம் அளித்தால் பரிசீலனை செய்வதாகத் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.