சென்னை, செப்.3- சிகாகோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமி ழர்கள் உற்சாக வரவேற்பு அளித்த னர்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முத லீடுகளை ஈர்க்கும் வகையில், முத லீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். 6 நிறு வனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் கையெழுத்திட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 3 அன்று காலை சிகாகோ சென்றடைந்தார். சிகாகோ தமிழ்ச் சங்கத்தினர் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அரசு அதி காரிகள் உடன்சென்றுள்ளனர்.
சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தி த்துப் பேசியுள்ளார். பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.