tamilnadu

img

தோழர் யெச்சூரி மறைவுக்கு தமிழகம் கண்ணீர் அஞ்சலி!

சென்னை, செப்.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய பொதுச் செயலா ளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி செப்டம்பர் 12 அன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்க அமைப் புகள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம், மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் சார்பில் மாவட்டத் தலைநகர் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டா வது நாளாக  செப்டம்பர் 14 அன்று  இரங்கல் கூட்டங்கள்,மவுன  அஞ்சலி ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது. கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் என பல்லாயிரக் கணக்கானோர் தோழர் யெச்சூரி மறைவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழு அலு வலகத்திற்கு செப்டம்பர் 14 சனிக்கிழ மையன்று  வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி, கவிஞர் வைரமுத்து, திரைக்கலைஞர் ரோகிணி, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு தலைவர் கே.பாலகிருஷ்ணன், இடதுசாரி இயக்கத்தின் தொழிற்சங்க நிர்வாகி குமார், எழுத்தாளர் கி.இலக்குவன் உள்ளிட்டோர் யெச்சூரியின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  காந்தியின் பேரன்  அஞ்சலி  முன்னதாக, மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி அஞ்சலி செலுத்தினார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், க.கனக ராஜ், என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் பா.சுந்தர ராஜன், வே. ராஜசேகரன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.