சென்னை, ஆக.18-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமிக்கப்பட்டுள் ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.
1988 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி யான சுனில் குமார் கடந்த 2021 ஆம் ஆண்டு சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவில் டிஜிபி யாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர், ஏற்கனவே தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு வாரியத்தில் ஐஜி, கூடுதல் டிஜிபி, டிஜிபி யாக பணியாற்றி இருக்கிறார் தற்போது ஓய்வு பெற்ற பின்னர் அவ ருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது. ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த பதவியில் நியமிக்க படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.