tamilnadu

img

சூரப்பாவை பதவி நீக்காவிட்டால் முற்றுகை... இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை.....

சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பாவை உடனடியாக பதவிநீக்கம் செய்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நீக்காவிடில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தின் தலைசிறந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சூரப்பாவை நியமித்தது முதல் தொடர் சச்சரவுகளும், முறைகேடுகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவது, மாநில உரிமைகளை அவமதிக்கும் வகையில் தான்தோன்றித்தனமாக செயல்படுவது, பல்கலைக்கழக நிதியை நிறுத்திவிட்டு தனியார் கல்வி நிறுவனம் போல செயல்படத் திட்டமிட்டது, மாநில அந்தஸ்து பெற்ற இப்பல்கலைக் கழகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கான அத்துமீறிய நடவடிக்கைகள், தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் ரூ.80 கோடி ஊழல் என ரூ.250கோடி வரை ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது மற்றும் தனது மகளை அதிகாரத்தை பயன்படுத்தி பல்கலைக்கழக நிர்வாக பொறுப்பில் பணியமர்த்தியதுஎனஅடுக்்கடுக்கான குற்றச்சாட்டுகள்அவர் மீது சாட்டப்பட்டுள்ளன.

நீக்காவிடில் முற்றுகை 
இதையடுத்து சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தமிழக அரசுஓய்வுபெற்ற நீதியரசர் பி.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக விசாரணை நடைபெறும்பட்சத்தில் குற்றத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படும் நபரையே பதவியில் நீடிக்க செய்வது சட்டத்திற்கு எதிரானதாகும். எனவே சூரப்பாவையும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்களையும் பதவிநீக்கம் செய்திடவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தவறும்பட்சத்தில் மாணவர்களை திரட்டி அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அன்னாரது உடல் செவ்வாயன்று (நவ.17) காலை 11 மணி அளவில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பக்தவச்சலம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.