tamilnadu

img

தோளில் துண்டு... எங்கள் உரிமை!

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்புத் துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். நாமக்கல் நீதிமன்றத்தில், ஒரு வழக்கில் ஆஜராவதற்கு சிவப்பு சால்வையை தோளில் அணிந்து கொண்டு சென்றிருந்தேன். நீதிபதியிடம் வரும்போது துண்டை எடுத்து விடுமாறு தோழரிடம் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். தோழரிடம் நாங்கள் சொல்ல முடியாது என்று எனது சகதோழர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறகு  நீதிபதியின் அறைக்குள் சென்று நின்ற போது நீதிமன்ற பணியாளர்,  எனக்கு பின்னால் இருந்த  தோழர்களிடம் சொல்லி, தோளில் உள்ள துண்டை எடுக்குமாறு கூறினார். நான் எடுக்கவில்லை. ஆனால்  மாஜிஸ்திரேட்  என்னை பார்த்துவிட்டு எதுவும் சொல்ல வில்லை.

இடுப்பிலே கட்டி இருந்த துண்டை தோளில் போடு வதற்காக எங்களுடைய மூதாதையர்கள் நடத்திய போராட்டம், எதிர்கொண்ட பொய் வழக்கு, சிறை, சித்ரவதை, எல்லாவற்றிற்கும் மேலாக உயிர்த் தியாகம் இவற்றின் காரணமாகத்தான் தோளிலே தூண்டு ஏறியது என்கிற வரலாற்றுக் காவியத்தை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நீதிமன்றத்தில் தோளில் துண்டு அணியக்கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? விதிகள் ஏதாவது இருக்கிறதா? எதற்காக இப்படி துண்டை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை.

நீதிபதியே சொல்லி இருந்தாலும் நான் தோளிலிருந்து துண்டை அகற்றி இருக்க மாட்டேன் . ஏனென்றால் அது நாங்கள் போராடிப் பெற்ற உரிமை .அதை ஒரு போதும் இழக்க முடியாது.