சென்னை, செப். 30 - பொதுவுடமை இயக்கத் தலை வர் பி. சீனிவாசராவ் நினைவு நாளில் (செப்டம்பர் 30), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியானது, ஒவ்வோரா ண்டும் தீண்டாமை வன்கொடுமை களுக்கு எதிரான களப் போராட்டம், பஞ்சமி நிலமீட்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அதன்படி திங்களன்று தமிழ்நாடு முழுமையும் நடத்திய நேரடி களப் போராட்டங்கள் வெற்றிகளை ஈட்டி உள்ளன.
சிவகங்கை மாவட்டம்- பூவந்தி, மடப்புரம் தலித் மக்களுக்கு நிலம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவ னம் வட்டம், பூவந்தி, மடப்புரம் கிராமங் களில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி மாநிலத் தலை வர் த. செல்லக்கண்ணு தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் நிலத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அதனைத் தொடர்ந்து திருப்புவனம் வருவாய் வட்டாட்சியர், சிவகங்கை (ஆ.தி.ந) தனி வட்டாட்சியர் பேச்சு வார்த்தை நடத்தி, அக்டோபர் 3 அன்று இடத்தை அளந்து கொடுப்பதாக கை யொப்பமிட்டு உறுதி அளித்தனர்.
இதில் சி.பி.ஐ(எம்), மாவட்டச் செய லாளர் (பொறுப்பு) வி. கருப்புச்சாமி, தீஒமு மாவட்டத் தலைவர் எஸ். முத்து ராமலிங்க பூபதி, மாவட்டச் செய லாளர் ஆர்.வீரையா ஆகியோர் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம்- விஸ்வநத்தத்தில் தீண்டாமைச் சுவர் அகற்றம்!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில் தெரு பட்டியலின மக்களுக் கான மயானப் பாதையில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பு, தீண்டாமைச் சுவரை அகற்றும் போராட்டம் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி தலைமையில் அறிவிக்கப் பட்ட நிலையில் திங்களன்று காலை யில் மாவட்ட நிர்வாகத்தால் ‘தீண்டா மைச் சுவர்’ இடிக்கப்பட்டது. மேலும், ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து மயா னத்திற்கு செல்வதற்கு பாலம் மற்றும் பாதை அமைத்துத் தருவதாகவும், இத னை எழுத்துப்பூர்வமாக நாளைய தினம் முன்னணியின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வழங்குவதாகவும் வட்டாட்சியர் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் துணைப் பொதுச்செயலாளர் பி. சுகந்தி, மாவட்டச் செயலாளர் கே. முருகன் உள்ளிட்ட தலைவர்கள் மக்களை சந்தித்து போராட்டத்தின் வெற்றியை பகிர்ந்து கொண்டனர்.
அருந்ததியர் மக்களின் மயானத்திற்கு பாதை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி புத்தூர் வட்டம், அச்சம்தவிர்த்தான் ஊராட்சி, ராஜகோபாலபுரம் மற்றும் பூவாணி கிராம அருந்ததியர் மக்க ளுக்கு மயான வசதியும், ஏ. ராமலிங்க புரம் அருந்ததியர் மக்களுக்கு மயான எரி மேடையும் கேட்டு மாவட்டத் தலைவர் எம். முத்துக்குமார் தலை மையில் வட்டாட்சியர் அலுவலகத் தில் காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளை யம் வட்டம், நகராட்சிக்கு உட்பட்ட 42- ஆவது வார்டு திருவள்ளுவர் நகர், நெச வாளர் காலனி பட்டியலின மக்களின் மயானத்திற்கு பாதை கேட்டு வட்டாட்சி யர் அலுவலகத்தில் சி.பி.ஐ(எம்) மாவட்டச் செயலாளர் கே. அர்ஜுனன் தலைமையில் காத்திருக்கும் போரா ட்டம் நடைபெற்றது. இதனை தொட ர்ந்து மண்டல துணை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 15 தினங் களுக்குள் மண் பாதையும், 6 மாதத்திற்குள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்குப் பின் தார்ச் சாலையும் அமைத்து தருவதாக உறுதி யளித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம்- சேவுகம்பட்டி அருந்ததியர் மக்களுக்கு நிலம்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சேவுகம்பட்டி தலித் அருந்ததியர் மக்களுக்கு வழங்கிய பட்டா இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி நிலத்தில் காத்திருக்கும் போராட்டம் டி.ஒய்.எப்.ஐ மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் தலைமையில் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் ஒரு வார காலத்திற்குள் அளந்து கொடுப்பதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளனர். சி.பி.ஐ(எம்) மாவட்டச் செயலாளர் பி. செல்வ ராஜ், தீஒமு மாவட்டச் செயலாளர் கே.டி. கலைச் செல்வன், தலைவர் எம்.ஆர். முத்துச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
மதுரை மாவட்டம் - தொட்டப்பநாயக்கனூரில் பட்டா வழங்க உறுதி
மதுரை புறநகர் மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், தொட்டப்பநாயக்கனூர் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராகவும், ரத்து செய்யப்பட்ட அனைவருக்கும் பட்டா வழங்கி, இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி மாநிலச் செயலாளர்கள் செ. முத்து ராணி, எம். பாலசுப்பிரமணியன் தலைமையில் நிலத்தில் குடியேறும் போராட்டம் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய வட்டாட்சியர், வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு வந்து நீக்கம் செய்யப் பட பயனாளிகள் பட்டாவை பெற்றுக்கொள்ள லாம் என உறுதியளித்தனர். அதன்படி செவ்வாய்க் கிழமையன்று (அக்.1) பொதுமக்களும், முன்னணியின் தலைவர்களும் பட்டாவை பெற்றுக் கொள்கின்றனர். சி.பி.ஐ(எம்) புறநகர் மாவட்டச் செயலாளர் கே. இராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத் தாய், எஸ்.பாலா மற்றும் தீஒமு தலைவர்கள் செ. ஆஞ்சி, ஆர். சசிகலா ஆகியோர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் பின்னலாடை தொழிற்கூடங்களை செயல்படுத்த அதிகாரிகள் ஒப்புதல்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், தோப்பூர் அருந்ததியர் மக்களின் குடி யிருப்பிற்கும், ஈரோடு தாலுகா ஊனாட்சிபுதூர் பட்டியலின மக்களின் குடியிருப்பிற்கும் பட்டா, பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பின்ன லாடை தொழில் கூடங்களை செயல்படுத்திட வும், அந்தியூர் வட்டம், மைக்கேல்பாளையம் கிராம் க.மேட்டூர், இந்திரா நகர், வையங் குட்டை, பாறையூர் பட்டியலின மக்களின் மயான ஆக்கிரமிப்பை அகற்றிடவும், வேம்பத்தி கிராமம், கூலிவலசில் அருந்ததியர் மக்கள் குடியிருப்பு பகுதியில் நீர் வழித்தடத்தை அழித்து நில உடமையாளருக்கு வண்டித்த டம் அமைத்துத் தருவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செய லாளர் வீ. அமிர்தலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தாட்கோ மேலாளர், பின்னலாடை தொழில் கூடங்களை ஒரு மாத காலத்திற்குள் செயல் படுத்துவதாகவும், மற்ற கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றி தருவதாக ஒப்புதல் அளித்துள்ளனர். தீஒமு மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தருமபுரி மாவட்டம்- பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை கோரிக்கை
தர்மபுரி மாவட்டம், பெண்ணாகரம் வட்டம், மஞ்சநாயக்கனஅள்ளி, கலப்பம்பாடி ஆகிய ஊராட்சியை சேர்ந்த பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை கேட்டு நிலத்தில் குடியிருக்கும் போராட்டம் மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வட்டாட்சியர் தகுதியுள்ள பட்டியலின பயனாளிகள் அனைவருக்கும் பட்டா வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
இதில் மாவட்டச் செயலாளர் ஏ. சேகர், தலைவர் பி. ஜெயராமன், சி.பி.ஐ(எம்) மாவட்டச் செயலாளர் ஏ. குமார், மாநிலக்குழு உறுப்பினர் இரா. சிசுபாலன் ஆகியோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்- கோட்டையூரில் நிலமீட்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், கோட்டையூர் பட்டியலின மக்களுக்கு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தை அளந்து கொடுக்காததால் நிலத்தை கைப்பற்றும் போராட்டம் மாநில துணைத்தலைவர் பி. டில்லிபாபு மற்றும் துணைத்தலைவர் ஜி. ஆனந்தன் தலைமையில் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம்- அருங்குணத்தில் 100 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு ஒன்றியம், அருங்குணத்தில் சுமார் 100 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு உழுது பட்டியலின பயனாளிகளிடம் ஒப்படைக்கப் பட்டது. பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிலமீட்பு போராட்டத் தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் பி.செல்வன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில செயலாளர் இரா. சரவணன், சி.பி.ஐ(எம்) மாவட்டச் செயலாளர் எம். சிவக் குமார், மாவட்டத் தலைவர் எஸ். ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்- பஞ்சமி நிலக் கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், அத்தியூர், அரியலூர் மக்களின் பஞ்சமி நிலங்களை மீட்டு நிலம் இல்லாத பட்டியலின மக்களுக்கு வழங்கக் கோரியும், வாணாபுரம் கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு வழங்கிய வீட்டுமனை பட்டாவை அளந்து கொடுக்க வலி யுறுத்தியும் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் வி. மாரியப்பன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.பி.ஐ(எம்) மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், தீஒமு மாவட்டச் செயலாளர் வே.ஏழுமலை, தலைவர் வி.ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருப்பூர் மாவட்டம்- ஈட்டிவீரம்பாளையம் மக்களுக்கு நிலம்: வட்டாட்சியர் ஒப்புதல்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், ஈட்டிவீரம்பாளையம் மக்களுக்கு வழங்கப் பட்ட வீட்டுமனை பட்டா இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் சி.பி.ஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர் கே. காம ராஜ் தலைமையில் நடைபெற்றது. அக் 4 அன்று வட்டாட்சியர் அளந்து கொடுப்பதாக உறுதி யளித்துள்ளார். இதில் மாநில செயலாளர் சி.கே.கனகராஜ், மாவட்ட தலைவர் ச.நந்த கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம்- பட்டா வழங்குவதாக வட்டாட்சியர் உறுதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், சிறுபுழல்பேட்டை - எம்.ஜி.ஆர்.நகர், பில்லாங்குப்பம், மேல்முதலம்பேடு ஆகிய 3 பகுதிகளில் உள்ள பட்டியலின மக்களுக்கு பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாநில பொருளாளர் இ.மோகனா தலைமை யில் காத்திருக்கும் போராட்டம் அறிவித்த நிலை யில் அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் தீர்வு காணப்படுவதாக வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உறுதியளித்துள்ளார்.