tamilnadu

img

சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

சென்னை,செப்.9- சங்கம் அமைக்கும் உரிமையை அம லாக்கக்கோரி சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதில் தொழிலாளர் துறை தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று சிஐடியு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலை வரும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு)வின் கௌரவத் தலை வருமான அ.சவுந்தரராசன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:  

தொலைக்காட்சிப் பெட்டி, குளிர் சாதனப் பெட்டி போன்ற மின்னணு வீட்டு  உபயோகப் பொருட்கள் உற்பத்தி செய்யும் சம்சங் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் ஒரு தொழிற்சாலை நடத்துகிறது. இது  செயலுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகி ன்றன. இதில் 1700 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இதில் 60 பேர் பெண்கள், இந்தத் தொழிலாளர்களின் ஊதியம்,  இவர்களுக்கு உதிரிபாகம் உற்பத்தி செய்து தருகிற சில தொழிற்சாலைத்  தொழிலாளர்களின் ஊதியத்தைவிட குறைவாக உள்ளது. அக்கம் பக்கத் தோடு ஒப்பிடும்போது இவர்களின்  இதர சலுகைகளும் குறைவான தாகவே உள்ளன.

16 ஆண்டுகளாக இந்தத் தொழிலா ளர்கள் பதிவு செய்யப்பட்ட சங்கம் இல்லாமலே  இருந்துள்ளனர். ஆனால் நிர் வாகத்தின் அணுகுமுறைகளும், பிசி னாரித்தனமும், அடாவடி நடவடிக்கை களும்  பணிச்சுமை திணிப்புகளும் தொழிலாளர்களை சங்கம் அமைக்க தூண்டியுள்ளது. அவர்கள் சிஐடியு வை அணுகினார்கள். இரண்டு மாதங் களுக்கு முன்புதான்  சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு)  ஆரம்பிக்கப் பட்டது. சங்கம் ஆரம்பித்து பதிவிற்காக  விண்ணப்பித்த தில் இருந்து  நிர்வாகம் பல விதமான அடக்குமுறைகளை யும், கெடுபிடிகளையும் செய்து மிரட்டியது. தேர்ந் தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை பணி நீக்கம் செய்வோம் என்று மிரட்டுவது, நிறுவனத்திற்குள் இடமாற்றங் கள் செய்வது, லீவுமறுப்பது போன்ற பலவற்றோடு கடுமையான தனித் தனியான மிரட்டல்களில் அதிகாரிகள் ஈடுபட்டனர். வன்முறை ஏவப்படும் என்பதை பல முறைகளில் நேரில் கூறி  மிரட்டியுள்ளனர். தொழிற்சங்க பதிவு கிடைக்காது என்றும் அதற்கான வேலைகளைச் செய்துவிட்டோம் என்றும் நிர்வாகம் கூறு கிறது. தொழிலாளர்துறையின் நேர்மையே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு  தனிமைச்சிறை சித்ரவதை

சில தொழிலாளர்களை அறையில் மங்கலான வெளிச் சத்தில் தனித்தனியாக நாள் முழுவதும் அடைத்து வைத்துள் ளனர். இந்த தனிமைச்சிறை மிக மோசமான மனித உரிமை மீற லும், சித்ரவதையுமாகும்.

வேறு அமைப்பு அமைப்பதற்கான படிவத்தை நிர்வாகமே தயார் செய்து தொழிலாளர்களை கையெழுத்திடு மாறு கட்டாயப்படுத்தி வருகிறது. வேறு அமைப்பிற்கு ஆதரவு தருவோருக்கு குளிர்சாதனப் பெட்டி தரப்படும், தொலைக்காட்சிப் பெட்டி தரப்படும், பணம் தரப்படும் என்பது போன்ற ஆசை வார்த்தைகள் கூறப்படுகிறது. ஒரு தொழிற் சங்கத்தை பலவீனப் படுத்துவதற்காக இதுபோன்ற காரியங் களில் ஈடுபடுவது தொழிற்தகராறு சட்டப்படி கடுமையான குற்றம். துணைத் தொழிலாளர் ஆணையர் முன்பு நடந்த சமரசப் பேச்சு வார்த்தை யிலும் நிர்வாகம் சட்டத்தை மதிக்காம லும், வன்மத்தோடு நடந்துகொள்கிறது. வேறு வழியில்லாமல் தொழிலாளர்கள் இறுதி ஆயுதமான வேலைநிறுத்தத் தில் 9.9.2024 அன்றிலிருந்து ஈடுபட்டுள் ளனர்.

சமரசத்திற்கு இடமில்லை

இந்த வேலைநிறுத்தத்தில் முக்கி யமானதும் முதன்மையானதுமான கோரிக்கை சங்கம் அமைக்கும் உரிமை யும், கூட்டுபேர உரிமையுமாகும். இந்த கோரிக்கையில் சமரசம் செய்வதற் கான இடமே இல்லை. இது சட்ட  உரிமை. இதை நிலைநாட்டி தொழிலா ளர்களுக்கு உரியதாக்குகிற கடமை அர சினுடையது. இதை ஏற்று பழிவாங்கல் களை ரத்து செய்து, சங்கம் அமைப்ப தற்கு முன்பிருந்த நிலையைத் தொடர வேண்டும். கோரிக்கைகளைத் தொடர்ந்து பேச வேண்டும் என்பதே தொழிற்சங்கத்தின் கோரிக்கை. இதில் தலையிட வேண்டிய தொழிலாளர் துறை வேகமாக தலையிட வேண்டும் என்றும், தலையிடக் கூடாத காவல் துறை தலையிடாமல் இருக்கவேண்டும் என்றும், எந்த அசம்பாவிதத்திற்கும் தொழிற்சங்கம் இடம் தராமல் அமைதியாக போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.