tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு 44 இடங்களில் அனுமதி - சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த 44 இடங்களில் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான வழக்கு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் மட்டுமே அனுமதி பேரணிக்கு அனுமதி என்று நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்க தயார் என்றும், மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும், நவம்பர் 6-ஆம் தேதி பல இடங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் உத்தரவை இன்று பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், அரமனை, நாங்குநேரி ஆகிய இடங்களை தவிர 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது.
மேலும், உள்ளரங்கு கூட்டம் நடத்திக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளுக்கு பதிலாக விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.