சென்னை, ஜூன் 26- பொதுத்துறைகள், தனியாருக்கு தாரை வார்க்கப்படும் நிலையில், தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. வி.பி.சிங் 88ஆவது பிறந்த நாள் விழா சமூக நீதி பாதுகாப்பு பொதுக் கூட்டமாக திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை புரசைவாக்கத்தில் செவ்வாயன்று (ஜூன் 25) மாவட்டத் தலைவர் சு.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி பேசுகையில், 1950ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் அமலுக்குவந்த போதே தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்தது போலவே, பிற்படுத் தப்பட்டவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கிடைத்திருக்க வேண்டும். தாழ்த்தப் பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்க ளிடையே மித்திர பேதம் செய்த மனு வாதிகளின் சூழ்ச்சியால் அது கிடைக் காமல் போனது. ஆனால் வி.பி.சிங் பிரதமரானவுடன் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. 10 மாதம்தான் ஆட்சியில் இருந்தாலும் அவர் சாதித்த அந்த சமுகநீதி சாதனை என்பது காலம் முழுவதும் பேசப்ப டும் என்றார்.
பொதுத்துறை நிறுவனங்கள்
பொதுத்துறை எல்லாம் இந்த ஆட்சியில் தனியார்த் துறைகளுக்கு மடை மாற்றம் செய்யப்பட்டு வரு கின்றது. ரயில்வே கூட படிப்படியாக தனியார் துறைக்கு கைநழுவிப் போய்க் கொண்டுள்ளது. பொதுத் துறையிலிருந்து தனியார்த் துறைக்கு செல்லும்பொழுது நடை முறையில் சட்டப்படி அமலில் இருக்கும் இட ஒதுக்கீட்டின் கதி என்ன - நிலை என்ன என்பது முக்கியமான கேள்வி யாகும். இந்த நிலையில், தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை - அதற்கான சட்டம் அவசரமாகத் தேவை என்பதையும் கி.வீரமணி வலி யுறுத்தினார்.பொதுத்துறை எல்லாம் இந்த ஆட்சியில் தனியார்த் துறைகளுக்கு மடை மாற்றம் செய்யப்பட்டு வரு கின்றது. ரயில்வே கூட படிப்படியாக தனியார் துறைக்கு கைநழுவிப் போய்க் கொண்டுள்ளது. பொதுத் துறையிலிருந்து தனியார்த் துறைக்கு செல்லும்பொழுது நடை முறையில் சட்டப்படி அமலில் இருக்கும் இட ஒதுக்கீட்டின் கதி என்ன - நிலை என்ன என்பது முக்கியமான கேள்வி யாகும். இந்த நிலையில், தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை - அதற்கான சட்டம் அவசரமாகத் தேவை என்பதையும் கி.வீரமணி வலி யுறுத்தினார்.
பேரா.அருணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பேராசிரியர் அரு ணன் பேசுகையில், 1980இல் இந்திரா காந்தி காலத்திலேயே மண்டல் கமிஷன் தன்னுடைய பரிந்துரை யைக் கொடுத்து விட்டது. அதன்பிறகு 10 ஆண்டுகள் ராஜீவ்காந்தி ஆட்சி. ஆனால் யாரும் அதை நிறைவேற்றா மல் கிடப்பில் போட்டு விட்டார்கள். 1990இல் வி.பி.சிங் ஆட்சியில்தான் மண்டல் குழு பரிந்துரையை பிற்ப டுத்தப்பட்ட மக்களுக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை துணி வோடு அமல்படுத்தப்பட்டது.அதை பொருத்துக்கொள்ள முடியாத அத்வானி, அறிவித்த ஒரு வாரத்தி லேயே ராமருக்காக அயோத்தியை நோக்கி ரத யாத்திரை என அறிவித்தார். ஒருவேளை வி.பி.சிங் மண்டலை அமல்படுத்தவில்லை என்றால் அன்று ராமரை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார் அத்வானி. இதை நான் கூற வில்லை. அத்வானியே ஒரு ஆய்வாள ரிடம் தந்த பேட்டியில் இதை ஒப்புக் கொண்டுள்ளார்.
போலி ராம பக்தர்கள்
பாஜகவை போல போலி பக்தர்கள் உலகத்தில் கிடையவே கிடையாது. உண்மையிலேயே ராமர் மீது பக்தி இருந்து கோயில் கட்ட வேண்டு மென்றால் காலம்தாழ்த்தாமல் எப்போதோ கட்டி முடித்திருப்பார்கள். கட்டுவதற்கு மனம் இல்லாத கார ணத்தினால்தான் மசூதி இருந்த இடத் தில்தான் கட்டுவோம் என ஒற்றைக் காலில் நின்று கொண்டிருக்கிறார்கள். மோடி 2வது அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்கள் மொத்தம் 24 பேர். அதில் உயர் சாதியினர் மட்டும் 12 பேர். அந்த 12 பேரில் 9 பேர் பிராம ணர்கள். அப்படியென்றால் உங்க ளுக்கு வாக்களித்தவர்கள் உயர் சாதியினர் மட்டும்தானா? அதிகள வில் உங்களுக்கு வாக்களித்தவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பட்டியல் சாதியி னர்தானே. அதிகாரம், பதவி என்று வந்து விட்டால் உயர் சாதியினருக்கு 50 விழுக்காடு என்ன நியாயம். பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு மூடி வருகிறது. ரயில்வேயை தனியார்மயமாக்கப் போவதாக கூறுகிறது. ஏற்கனவே தொலைதொடர்புத் துறை (பி.எஸ்.என்.எல்) தத்தளித்துக் கொண்டி ருக்கிறது. பொதுத்துறை நிறுவ னங்கள் மூடப்பட்டால் இடஒதுக்கீடு என்னவாகும். வி.பி.சிங்கின் அந்த மகத்தான சாதனை என்னவாகும். சமூக நீதிக்காக பெரியாரும், வி.பி. சிங்கும் குரல் கொடுத்தவர்கள். அரசி யல் அதிகாரத்தில், வேலை வாய்ப்பில், கல்வியில் சமூக நீதி வெல்லப்பட வேண்டும். வெல்லப்ப டும் வரை நாம் ஒன்றுபட்டு களத்தில் இறங்கி போராட வேண்டும் என்றார்.
க.பொன்முடி
முன்னாள் அமைச்சர் க.பொன் முடி (திமுக) பேசுகையில், இந்தியா விலேயே சமூக நீதிக்காக இயக்கம் நடத்தியது திராவிட இயக்கம்தான். நீதிக்கட்சி ஆட்சிதான் அதற்கான விதையை ஊன்றியது. மண்டல் குழு பரிந்துரைகளை செயல்படுத்து வது உள்ளிட்ட அதன் பங்களிப்பு மகத்தானது. வி.பி.சிங் தந்தை பெரி யார் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டவர். அதனால்தான் சமூக நீதிக் கொள்கையில் உறுதியாக நின்றார். 1990இல் இட ஒதுக்கீடு அறிவிக்கப் பட்டாலும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முழுவதுமாக வழங்கப்படவில்லை. எனவே சமூக நீதியை நிலைநாட்ட தொடர்ந்து போராட வேண்டிய அவசி யம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இரா.முத்தரசன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், காவிரிப் பிரச்சனை யில் தமிழ்நாட்டின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்டு, காவிரி நடுவர் மன்றத்தை வி.பி.சிங் அமைத்தார். தற்பொழுது நாம் மக்க ளவைத் தேர்தலில் பெற்றிருக்கக் கூடிய வெற்றியை விட, சமூகநீதியை காப்பதில் வெற்றி பெறுவதே முக்கியம் என்றார்.
எம்.எச்.ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சித் தலை வர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசுகை யில், கடவுள் நம்பிக்கையாளரான நீங்கள் ஏன் கடவுள் மறுப்பாளரான பெரியாருக்கு வக்காலத்து வாங்கு கிறீர்கள் என சிலர் கேள்வி எழுப்பு கிறார்கள். தந்தை பெரியார் இறை மறுப்பையும் தாண்டி சமூகநீதிக் கொள்கைக்காக பாடுபட்டவர். பாஜக ஆட்சி கொண்டுவரத் துடிக்கும் புதிய கல்விக் கொள்கையால், தொடக்க வகுப்பில் சேரும் மாணவர்களின் எண் ணிக்கை 95 விழுக்காட்டில் இருக்கும். அதுவே 9, 10 ஆம் வகுப்பிற்கு வரும் போது 79 விழுக்காடாக சரியும். 11, 12 ஆம் வகுப்பிற்கு வரும்போது 51 விழுக்காடாக வீழ்ச்சியடையும். இதில் பாதிக்கப்படுபவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மக்களே என்றார். இதில் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், வெளியுறவு செயலா ளர் கோ.கருணாநிதி, பொருளாளர் வீ.குமரேசன், சட்டத்துறைச் செயலா ளர் த.வீரசேகரன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி உள்ளிட்டோரும் பேசினார்கள்.