நாட்டில் பணவீக்கம் குறைந்து வரு வதாக புள்ளிவிவரங்கள் காட்டி னாலும், கடந்த 5 ஆண்டுகளாக 4 சதவீதத்துக்கும் அதிகமான பண வீக்கம் நிலவி வருவது நகர்ப்புற குடும் பங்களுக்கு கடும் அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
“மிண்ட்” நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வின்படி, குறிப்பாக இளை ஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின ரிடையே எதிர்கால பணவீக்கம் குறித்த கவலை அதிகமாக உள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டு வாடகை அதி கரிப்பே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
மாத வருமானம் ரூ.50,000 முதல் ரூ.1,50,000 வரை உள்ள நடுத்தர வர்க்கத்தி னரிடையே பணவீக்கம் குறித்த கவலை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக, வீடு வாங்குதல், குடும்பம் தொடங்குதல் போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையில் உள்ள இளம் தலைமுறை யினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நுகர்வோர் நம்பிக்கை ஆய்வின்படி, 77% குடும்பங்கள் அடுத்த மூன்று மாதங்களிலும் பணவீக்கம் தொடரும் என்று கருதுகின்றனர்.
2019 அக்டோபர் முதல் தொடர்ந்து 4% க்கும் அதிகமான பணவீக்கம் நிலவி வருவது மக்களின் வாங்கும் சக்தியை கணிசமாக பாதித்துள்ளது. “தொடர்ந்து உயரும் விலைவாசி மக்களின் சேமிப்பையும், முதலீட்டு முடிவு களையும் பாதித்துள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் தங்களது அன்றா டச் செலவுகளையே சமாளிக்க சிரமப் படுகின்றனர்,” என ஆய்வின் ஆசிரியர் தீபா வாசுதேவன் தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.