tamilnadu

மதவெறி மாய்க்க களம் கண்ட தீரர்களுக்கு வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள்!

சென்னை, ஏப்.23- மதவெறி சக்திகளை வீழ்த்து வதற்கு, ஏப்ரல் 19 அன்று தமிழ கத்தில் நடைபெற்ற மக்களவைத்  தேர்தல் களத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நலக்குழு வின் மாநிலத் தலைவர் எஸ்.  நூர்முகமது, பொதுச்செயலா ளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: “தமிழ்நாட்டில் ஏப்ரல் 19  அன்று நடைபெற்ற பதினெட்டா வது நாடாளுமன்றத் தேர்தலில் மதவெறி சக்திகளை வீழ்த்த பிரச்  சாரத்திலும், களப் பணியிலும் ஈடு பட்ட அனைத்து சகோதர, சகோ தரிகளுக்கும் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக் குழு பாராட்டு  களை தெரிவித்துக் கொள்கிறது.

 இந்தியாவை இந்துத்துவா தேசமாக்க முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ்  - பாஜக மதவெறி கும்பலிடமி ருந்து நாட்டையும், அரசியல மைப்புச் சட்டத்தின் மாண்பு களையும் காக்க வேண்டியதன் அவசியத்தை முன்வைத்தும், மதச்சார்பின்மையை, மக்கள்  ஒற்றுமையை, சமூக நல்லிணக் கத்தை பேணுகிற, சமூக நீதியை  நிலைநாட்டுகிற, மனிதநேயத்தை உயர்த்திப் பிடிக்கிற பண்புகளை  காத்திட வேண்டும் என வலியு றுத்தியும் தேர்தல் களத்தில் இந்  தியா கூட்டணியின் வேட்பாளர் களுக்காக பல்வேறு வழிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைத்து சிறுபான்மையினர் நலன் விரும்பிகளுக்கும் தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்  குழு பாராட்டுகளை தெரிவித்துக்  கொள்கிறது.

இந்த கடமையை தமிழகத் தின் அனைத்து பகுதிகளிலும் துண்டறிக்கைகள் வெளியிட்டு பெரும்பான்மை சமூகம் உள்  ளிட்ட அனைத்து பகுதி மக்கள்  மத்தியிலும் கருத்து பிரச்சாரத்தை முன் எடுத்து பெரும் எண்ணிக்  கையிலான முஸ்லிம்கள், கிறிஸ்  தவர்களை வாக்களிக்க செய் வது உள்ளிட்ட பணிகளில் ஈடு பட்ட அனைத்து சகோதர, சகோ தரிகளுக்கும், இப்பணிகளை வெகு சிறப்பாக முன்னெடுத்த  மாநில, மாவட்ட நிர்வாகிகளுக் கும் தமிழ்நாடு சிறுபான்மை மக்  கள் நலக்குழு வாழ்த்துக்களை யும், பாராட்டுக்களையும் தெரி வித்துக் கொள்கிறது. மத நல்லிணக்கத்தை, மதச்  சார்பின்மையை, மக்கள் ஒற்று மையை, ஜனநாயகத்தை, மனித நேயத்தை பாதுகாக்கும் பணி யை முன்னெடுப்போம்.”

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.