விழுப்புரம், ஜூன் 12- இந்திய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கடந்த 2005ஆம் ஆண்டு சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தூத்துக்குடி வரை பெட்ரோலியம் மற்றும் எரிவாயு எடுத்துச் செல்ல விழுப்புரம் மாவட்டத்தில் காங்கேய னூர், காணைகுப்பம், தெளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகளிடம் உரிமை பெற்று விவசாய நிலங்களில் பைப் லைன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் உரிமை பெறாமல், இழப்பீடு வழங்காமல் அந்த நிலங்களில் மீண்டும் பைப்லைன் போடுவதற்கான பணி களை இந்தியன் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் துவக்கியுள்ளது.இதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டித்துள்ளது. மேலும் விவசாய நிலங்களில் பைப்லைன் அமைப்பதை கைவிட்டு, நெடுஞ் சாலை ஓரங்களில் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்டச் செயலா ளர் ஆர்.டி.முருகன் தலைமையில் மாவட்டத் தலைவர் பி.சிவராமன், வட்டச் செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவ சாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.