இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட ரத்ததான கழகம் சார்பில் ஞாயிறன்று (அக்.20) சோழிங்கநல்லூர் பகுதி கல்லுக்குட்டையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, இணைச் செயலாளர் பாலசந்திர போஸ், ராயப்பேட்டை தலைமை மருத்துவர் தமிழ்மணி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயலாளர் ப. ஆறுமுகம், பொருளாளர் சுசீந்திரா, ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் கே.திவாகர், நிர்வாகிகள் ஹேமகுமார், மகேஷ், சிவக்குமார், காண்டீபன், இமயவர்மன், சுபாஸ், ரேகா, பரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.