வடசென்னை வாழ் முதிய மாற்றுத்திறனாளிகளுக்கு இந்திய பார்வையற்றோர் தேசிய சம்மேளத்தின் சார்பில் அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் திங்களன்று (ஆக.17) வழங்கப்பட்டது. பார்வையற்றோர் சங்கத் தலைவர் மனோகரன் தலைமையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட. நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், கி.ராதை, நடராஜன், செல்வகுமாரி ஆகியோர் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியை 4 மையங்களில் முன்னின்று நடத்தினர்.