100 நாள் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
ருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், நொச்சி பட்டி மக்களுக்கு 100 நாள் வேலை கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டத் தலைவர் லெனின் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கடத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் விளக்கி பேசினார். வட்டச் செயலாளர் கே.செல்வராசு, சிங்காரப்பேட்டை செயலாளர் வேலு, பொருளாளர் எத்திராஜ், வட்டக் குழு உறுப்பினர்கள் எம்.கல்பனா, திருமால், ஏ.கல்பனா, மார்க்சிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் சபாபதி ஆகியோர் கலந்துகொண்டனர். ஏழு நாட்களுக்குப் பிறகு வேலை வழங்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார்.