முன் அறிவிப்பு இன்றி மின்சாரம் நிறுத்தம் கண்டித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
புதுச்சேரி, மே 25- புதுச்சேரி மாநிலம் பாகூரில் முன் அறிவிப்பு இன்றி மின்சாரம் நிறுத்தப் படுவதை கண்டித்து வீடு கள் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி பாகூர் நகரம் மற்றும் அதனை சுற்றி யுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக முன்னறிவிப்பின்றி தொடர் மின்வெட்டு நடைபெற்று வருகிறது. நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் துவங்கி பத்து மணி நேரம் வரை மின்வெட்டு நடை பெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. விவசாயப் பகுதியான பாகூரில், சிறு தொழில் செய்பவர்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் உள்ளிட்ட மக்கள் அனை வரும் மின் வெட்டால் கடுமையான பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். கருப்பு கொடி போராட்டம் மாநிலத்தின் கடைக் கோடி பகுதி என்பதாலோ, விவசாயம் நிறைந்த கிராமப் பகுதி என்பதாலோ அல்லது அரசியல் காரணத்திற்காகவோ? புதுச்சேரி மாநிலத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு முன்னறிவிப் பின்றி மின்சாரம் துண்டிக்கப் படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கமிட்டி சார்பில் கமிட்டி செய லாளர் சரவணன் தலைமை யில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன் உள்ளிட் டோர் போராட்டங்களில் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அறி விப்பை ஏற்று பாகூர் நகரம், குருவிநத்தம், சோரியாங்குப்பம் அதனை சுற்றியுள்ள கிராமப் புற பகுதிகளில் உள்ள வீடுகளில் ஞாயிற்றுக் கிழமை (மே.25) பொது மக்கள் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரி வித்தனர். தொடர் மின்வெட்டை கண்டித்தும், மின் துறை யில் உள்ள காலி பணியிடங் களை நிரப்ப வேண்டும். மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே 26 ல் பாகூரில் உள்ள மின்துறை இள நிலை பொறியாளர் அலு வலகம் எதிரில் முற்றுகை போராட்டம் நடை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.