tamilnadu

img

வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு

சென்னை, ஆக.4– தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க வைர விழா ஆண்டு 16–ஆவது மாநில மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி சென்னை சேப்பாக் கம் கலைவாணர் அரங்கத் தில் நடைபெற்றது.

நிறைவு நாள் நிகழ்ச்சி யில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

1964–ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வைர விழாவை கொண்டாடுகிறது. எந்த ஓர் அமைப்பாக இருந்தா லும், சங்கமாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும், தொடர்ந்து அறுபது ஆண்டுகள் நடத்துவது என்பது மிக மிக அரிதான  ஒரு விஷயம். இதை `வைர  விழா மாநாடு’ என்று சொல் வதை விட, அதை `கோரிக்கை வைக்கும் மாநாடு’ என்று கூடச் சொல்ல லாம். அவ்வளவு கோரிக்கை களை வைத்துள்ளீர்கள்” என்றார்.

ஒடுக்குமுறைகள்

கலைஞர் தலைமை யிலான திமுக அவசர கால பிரகடனத்தை எதிர் கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் பல ஒடுக்கு முறை கள் சந்திருக்கிறது. இப்போ தும் சந்தித்துக் கொண்டி ருக்கிறது. தேர்தலில் வெற்றி யையும் சந்தித்திருக்கிறது. தோல்வியையும் சந்தித் திருக்கிறது. ஆனால், எல்லா வற்றையும் துணிச்சலோடு எதிர்கொண்டு மீண்டும்  எழுந்துள்ளது. அதற்குத் துணை நின்றவர்கள் அரசு ஊழியர்கள்தான்.

‘தாய்த்துறை’!

வருவாய்த் துறையை  அரசின் எல்லா துறை களுக்கும் `தாய்த்துறை’ என்று கூட சொல்வார்கள். பொதுமக்களின் அன்றாட வாழ்வு சிறப்பாக நடைபெற  தேவையான அனைத்து வசதிகளையும் உருவாக்கு தல், அவற்றைக் காப்பது, பராமரித்தல் ஆகிய பணி களை வருவாய்த்துறை அலுவலர்கள் தான் செய்து வருகிறார்கள்.

மகிழ்ச்சி எதிரொலிக்கும்!

அரசு அலுவலர்கள், தங்கள் வாழ்வில் மகிழ்ச்சி யாக இருந்தால்தான் பொது மக்கள் வாழ்வில் அந்த மகிழ்ச்சி எதிரொலிக்கும் என்பதுதான் நம் முதல மைச்சர், திமுக அரசின் நிலைப்பாடு. அதுவும் உங்கள் துறையின் பெயர் ‘வருவாய்த்துறை’. எனவே உங்கள் கோரிக்கைகள் கண்டிப்பாக முதலமைச்சரி டம் எடுத்துச் செல்லப்படும்.

உங்களின் 12 கோரிக்கை கள் நிறைவேற்றித் தரப் பட்டுள்ளன. மீதமிருக் கும் 3 கோரிக்கைகளையும் நிச்சயம் முதலமைச்சர் பார்வைக்கு எடுத்துச் சென்று, வெகு விரைவில் செய்து கொடுப்போம். உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசு கண்டிப்பாக காது கொடுத்துக் கேட்கும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற, இந்த அரசு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும். 

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் அமைச் சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வருவாய் ஆணையர் கூடுதல் ஆணை யர் முனைவர் நடராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலை வர் டேனியல் ஜெயசிங், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார்,  மாநாட்டைத் தலைமை யேற்று நடத்திக் கொண்டி ருக்க கூடிய சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.பி. முருகையன், சங்கத்தின் பொதுச்செயலாளர் சு.சங்கர லிங்கம், மாநிலப் பொருளா ளர் சோமசுந்தரம், மாநில துணைத்தலைவர்கள் குமரேசன், மங்கல பாண்டி யன், மணிகண்டன், அர்த்த நாரி, ராஜகோபால், மாநிலச்  செயலாளர் பார்த்திபன், அன்பழகன், சுப்பு, தமிழர சன், செந்தில்குமார், ஜோசி,  வரவேற்புக் குழுச் செயலா ளர் கார்த்திகேயன், சிவ ஜோதி, இளங்கோவன், சங்கத்தின் முன்னாள் நிர்வா கிகள், சங்கத்தின் மாவட்ட  தலைவர் ராமு உட்பட பல ரும் கலந்து கொண்டனர்.