போலி சான்றிதழ்கள் தயாரிப்பு
சிதம்பரம் தீட்சிதர் உட்பட 2 பேர் கைது!
சிதம்பரம், ஜூன் 19- நூற்றுக்கும் மேற் பட்ட பல்கலைக் கழ கங்களின் பெயரி லான போலி சான்றி தழ்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தொடர்பாக, சிதம்பரம் தீட்சிதர் சங்கர் மற்றும் நாகப்பன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவ ரிடம் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களையும், போலி சான்றிதழ் தயாரிப்புக்கான லேப்டாப், கம்ப்யூட்டர்கள், ஜெராக்ஸ் இயந்தி ரங்கள் ஆகியவற்றையும் சிதம்பரம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆதீனத்தின் முன்னாள் உதவியாளருக்கு சிறை!
மயிலாடுதுறை, ஜூன் 19- தருமபுரம் ஆதீ னத்தை மிரட்டியதாக மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலை வர் அகோரம், ஆடு துறை வினோத், விக்னேஷ், செம்ப னார்கோயில் கலைமகள் கல்வி நிறுவ னங்களின் தாளாளர் குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந் நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவி யாளர் திருவையாறு செந்தில் (48) மொட்டை அடித்தும், தாடி வைத்தும், மாறு வேடத்தில் வாரணாசியில் தலை மறைவாக இருந்து வந்த நிலையில், அவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் நீட்டிப்பு!
இது 40-ஆவது முறை
சென்னை, ஜூன் 19- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலா ஜியை, ஒன்றிய அரசின் அமலாக்கத் துறையானது, சட்டவிரோத பணப்பரி மாற்ற தடைச் சட்ட வழக்கில் 2023 ஜூன் 14 அன்று கைது செய்தது. அன்று முதல் அவர் தொடர்ந்து சிறையிலேயே உள்ளார். அவருக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை, ஜூன் 25 வரை நீட்டித்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி உத்தர விட்டுள்ளார். இதன் மூலம் 40-ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதி மன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!
சென்னை, ஜூன் 19- தூத்துக்குடி துப் பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசார ணைக்கு எடுத்த வழ க்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வ லர் வழக்கறிஞர் ஹென்றி திபேன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந் தது. அப்போது சிபிஐ சார்பில், தூத்துக் குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை யை, மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஆனால், தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக் கப்பட்டது.
இதையடுத்து, மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தர விட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 1-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
ஆட்சியர்களுடனான ஆலோசனை நிறைவு
சென்னை, ஜூன் 19- ஜூன் 11 முதல் 19 வரை நான்கு கட்ட மாக மாவட்ட ஆட்சி யர்களுடன் தலை மைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோ சனை மேற்கொள்வார் என்று அறிவிக்கப் பட்டது.
அதன்படி, ஜூன் 11 அன்று முதற்கட்ட மாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆட்சி யர்கள் மற்றும் ஜூன் 13 அன்று திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர் மாவட்ட ஆட்சி யர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, ஜூன் 15 அன்று கோவை, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கரூர் மாவட்ட ஆட்சியர்களுடன், ஜூன் 19 அன்று மதுரை, நெல்லை, கன்னியா குமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென் காசி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களு டன் ஆலோசனை நடத்தினார்.
காற்றாலை மின் நிலையங்கள்:
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு விருது
சென்னை, ஜூன் 19- காற்றாலை மின் நிலையங்கள் அதிக அளவில் அமைப்ப தற்காக தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசின் விருது கிடைத் துள்ளது.
இவ்விருதை ஒன்றிய இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக்கிடம் இருந்து தமிழக மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி பெற்றுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி பல்வேறு தனி யார் நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக 10,603 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்களை அமைத்திருந்தன. இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்தியது போக எஞ்சியதை மின்வாரி யத்துக்கு விற்பனை செய்து வருகின்றன.
இந்த நிலையில், 2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியா வில் காற்றாலை மின் நிலையம் அமைக்கப்பட்டது, இதில் தமி ழகம் 3வது இடத்தைப் பிடித்ததற்கு விருது வழங்கப்பட்டது.
10 ஆம் வகுப்பு மறுகூட்டல்-மறுமதிப்பீடு முடிவுகள் நாளை வெளியீடு!
சென்னை, ஜூன் 19- தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் ஜூன் 21 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஜூன் 24 முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு விண் ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு 25, 26 தேதிகளில் செய்முறை தேர்வு நடைபெறும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.