tamilnadu

பத்திரப் பதிவுக்கு பட்டா பிரதி கேட்டு மக்களை அலைக்கழிக்கக் கூடாது

சென்னை,செப்.20- சொத்து விற்பனை தொடர் பான பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும் போது, பட்டா,  y வரைபடம் ஆகியவற்றின் காகித பிரதிகளை கேட்க வேண் டாம் என்று சார் பதிவாளர் களுக்கு பதிவுத் துறை உத்தர விட்டுள்ளது.

வருவாய் துறையில், இ - சேவை இணையதளத்தில், ‘தமிழ் நிலம்’ மென்பொருள் வாயிலாக பட்டா பிரதிகள், ஆன்லைன் முறைக்கு மாற்றப் பட்டுள்ளன. இருப்பினும், ஆன்லைன் தொகுப்பில் இருந்து பிரதி எடுத்து, ‘அட்டெஸ்டேஷன்’ எனப்படும், அங்கீகரிக்கப்பட்ட அரசு அதி காரியிடம் சான்றொப்பம் பெற்று  வருமாறு, சார் பதிவாளர்கள் மக்களை வற்புறுத்துகின்றனர்.இதனால், சொத்து வாங்குபவர் பட்டா பிரதி எடுக்கவும், அதற்கு கையெழுத்து வாங்கு வதற்காகவும் அலைய வேண்டி யுள்ளது.

பட்டா உள்ளிட்ட ஆவ ணங்கள், ஆன்லைன் முறை யில் கிடைக்கும் போது, அதை பிரதி எடுத்து வர சொல்வது தேவையில்லாத வேலை என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, பதிவுத் துறைக்கு நில அளவை துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர்.

அதன் அடிப்படையில், பத்தி ரங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் போது, பட்டா,  சிட்டா, நில அளவை வரைபடம் போன்றவற்றின் காகித பிரதிகளை கேட்க வேண்டாம். இந்த சொத்துக்களின் சர்வே எண்ணை பயன்படுத்தி, வருவாய் துறையின் தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் பட்டா விவரங்களை, சார் பதி வாளர்களே சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இது விஷயத்தில் காகித பிரதி கேட்டு,  பொது மக்களை அலைக் கழிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.