திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (நவ 26), திருவள்ளூர் டோல்கேட் அருகில் தர்ணா நடைபெற்றது. 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 விழுக்காடு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தது ரூ.7850 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலாளர் ஜெயராமன்,ஓய்வுபெற்ற காவலர் நலசங்கத்தின் நிர்வாகி சுப்பிரமணி, போக்குவரத்து துறை சங்க நிர்வாகி குப்பன்,ஆசிரியர் சங்க நிர்வாகி வேதா.தனபாலன், மாநிலச் செயலாளர் நாதன் ஆகியோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் கன்னியப்பன் நன்றி கூறினார்.